சென்னை, செப். 19: சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு மழை நீர் வடிகால் பணிகளுக்கு டெண்டர் விட்டதில் ₹26.61 கோடி மோசடி நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ்பி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் புகாரின் மீது விசாரணை நடத்தினர்.
சென்னை மாநகராட்சியில் சென்னை மெகா நகர மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சேதமடைந்த சாலைகள், சாலைகள் மறுசீரமைப்பு, நடைபாதைகள், பாலங்கள் புனரமைக்க மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 24.10.2018ம் தேதி ₹290 கோடி மதிப்பிட்டில் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக ₹246.99 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருகர மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. அப்போது அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கான அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தார். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி, அவரது கூட்டாளியான ஆர். சந்திரசேகர் நடத்தும் கே.சி.பி. இன்ஜினியரிங் பிரவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு டெண்டர் விடும் வகையில் சாதகமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆர். சந்திரசேகர் அதிமுக கோவை ஊரக மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேசிய பயண அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி : விரைவில் அறிமுகம்
மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 சவரன் நகையை கண்டுபிடிக்க தொழிலதிபரிடம் ஜிபே மூலம் ₹20 ஆயிரம் எஸ்ஐ லஞ்சம் - உயர் அதிகாரிகள் விசாரணை
வீட்டில் மாயமான 40 சவரன் நகைகள் குறித்து புகார் அளித்த தொழிலதிபரிடம், திருட்டை கண்டுபிடிக்க ஜிபிஇ மூலம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர் பாக உதவி ஆய்வாளரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு
திருத்தனி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை
பொன்னேரி நகராட்சியில், 10 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : இயக்குனர் கவுதமன் பேட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்
மீனம்பாக்கம், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டில் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து
திருப்போரூர் அருகே ஆலத்தூர் தொழிற்பேட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.