மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறினாலும், இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1948-க்கும் முன்னர் வரை பாலஸ்தீனப் பகுதியானது, பிரிட்டனின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரின் அதிரடி நடவடிக்கையால் உயிருக்குப் பயந்து அந்த நாட்டிலிருந்து வெளியேறிய யூதர்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இத்தகைய சூழலில், அகதிகளாகப் பரிதவித்த யூத மக்கள் அனைவரும் அமெரிக்காவின் தலையீட்டால் பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர்.
ஏற்கெனவே, பாலஸ்தீனப் பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் இஸ்லாமியர்களுக்கும், புதிதாகக் குடியமர்த்தப்பட்ட யூதர்களுக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைகள் எழுந்தன. இதையடுத்து, யூதர்கள் குடியமர்த்தப்பட்ட பகுதியை தனி நாடாக, அதாவது இஸ்ரேல் என்ற புதிய நாட்டை உருவாக்க அமெரிக்கா முன்முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இஸ்ரேல் நாட்டுக்கு ஐ.நா. சபையின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது.
ஆனால், இஸ்லாமியர்கள் நீண்ட காலமாக வசித்துவரும் பகுதிகளை உள்ளடக்கிய பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என இந்தியா தலைமையிலான அணிசாரா நாடுகள் குரல் கொடுத்தன. ஆனால், இதற்கு ஐ.நா. சபையின் அங்கீகாரம் கிடைக்காததால், பாலஸ்தீன பிரச்னை இன்னமும் நீடிக்கிறது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பாரதியார் இல்லத்தில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்
தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமடைந்த நிலையில், மறுசீரமைப்புப் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
கற்றல்திறன் குறைபாடு கல்வியும், மருத்துவமும்!
‘குழந்தைகள் ஆசீர்வாதம் செய்யப்பட்டவர்கள்’ என்பது நல்லோர் வாக்கு. ஆனால் குழந்தைகளிலேயே மனநலம் குறைந்தவர்கள், கற்றல் திறன்பாடு குறைவாக உள்ளவர்கள், ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் எனப் பல்வேறு குறைபாடு உள்ளவர்கள் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் நிலை மேம்படவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தேவையானவை எவை?
டி காக் அசத்தலில் கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி
ஐபிஎல் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
டிம் செய்ஃபர்ட் அதிரடி; நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேருவது தொண்டர்களின் மனநிலைக்கு எதிரானது
பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால், அது தொண்டர்களின் மனநிலைக்கு எதிராக இருக்கும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலர் மு.தமிமுன் அன்சாரி.
செய்திக் கதம்பம் குடிநீர் கேட்டு சாலை மறியல்
கந்தர்வகோட்டை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சகுடா, சார்லபள்ளி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
கச்சகுடா, சார்லபள்ளி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளில் கலப்பதற்காக கொண்டு சென்ற 7,525 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
கேரள மாநிலத்தில் கள்ளில் கலப்பதற்காக கர்நாடகத்தில் இருந்து லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 7,525 லிட்டர் எரிசாராயத்தை கோவை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து, இரு லாரி ஓட்டுநர்களைக் கைது செய்தனர்.
செங்கிப்பட்டியில் கருத்தரங்கம்
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் மகளிர் ஆயம் சார்பில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.