ஆனால் ஒரு வீரர், அமைதியாக, கோல் போஸ்ட் ஓரமாக நின்று கொண்டு கண்ணீருடன் மவுனமாக இருந்தார். அவர் தான் பி.ஆர். ஸ்ரீஜேஷ்.
20 ஆண்டுகளாக ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் தடுப்பு அரணாக செயல்பட்ட ஸ்ரீஜேஷ் பாரிஸ் ஓலிம்பிக்குடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஓய்வினை அறிவித்து விட்டார்.
கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷின் ஹாக்கி பயணம் தொடங்கியது என்னவோ நம் தமிழ்நாட்டில் தான்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்? புறநகர் பகுதியில் உள்ள கீழக்கம்பலத்தில் ஒரு எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீஜேஷ். தனது பள்ளிக் காலத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் வாலிபால் விளையாட்டுகளை தேர்வு செய்து விளையாடிக் கொண்டிருந்தார்.
ஸ்ரீஜேஷின் 12 -ஆவது வயதில் அவரது பள்ளி ஹாக்குப் போட்டியில் பயிற்சியாளர் ஜெயகுமார் அவரை முதல்முறையாக கோல்கப்பராக தேர்வு செய்து நிறுத்தினார்.
ஸ்ரீஜேஷ்'க்கு அதிகமாக ஒடுவது பிடிக்காது. இதனால் நின்ற இடத்தில் இருந்தே துல்லியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு எதிரணியை கோல் போட விடாமல் தடுப்புச் சுவராக நிற்கும் ஆட்டம் அவருக்கு பிடித்திருந்தது.
அன்றிலிருந்து ஸ்ரீஜேஷ் க்கு ஹாக்கி மீது கவனம் இரும்பியது. ஆனால் ஏழ்மையான குடும்பம் என்பதால் ஸ்ரீஜேஷ்'க்கு ஹாக்கி உபகரணங்கள் வாங்குவதற்காக பணம் இல்லை.
இருந்தும், விவசாயத்திற்காக தான் வைத்திருந்த மாடுகளில் ஒன்றை விற்று மகனுக்கு ஹாக்கி கிட் வாங்கிக் கொடுத்தார் ஸ்ரீஜேஷின் தந்தை.
அந்த இயாகமும், நம்பிக்கையும் வீண் போகவில்லை. கடந்த 2004ம் ஆண்டு தனது 16 வயதில் கேரளாவிலிருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு ஜூனியர் அணியில் இடம் பெற்றார்.
அவரது ஆட்டத் திறன் அவருக்கான அங்கீகாரத்தை அணியில் பெற்றுத் தந்தது. சக வீரர்களின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமானார்.
2008 ஜூனியர் ஆசிய கோப்பையில் இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்றபோது தான் ஸ்ரீஜேஷ் மீது அனைவர் பார்வையும் விழுந்தது. அந்த தொடரின் சிறந்த கோல் கீப்பருக்கான விருதையும் வென்றார்.
அதன் பிறகு, சீனியர் ஹாக்கி அணியிலும் இடம் பெற்று, அணியில் தனது இடத்தை அழுத்தம் இருத்தமாக பதிவு செய்து கொண்டார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.