குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பறக்கும் மூலிகை தொக்குகள்!

"நாம் அன்றாடம் உணவில் பயன் படுத்தும் கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் கீரைகளில் பல மருத்துவ குணங் கள் நிறைந்துள்ளது. அதனை நாம் சமைத்து சாப்பிட்டாலே பல நோய்க்கு மருந்தாக அமையும். இது பலருக்கு தெரிவதில்லை என்பதைக் காட்டிலும் அதனை முறை யாக சமைத்து சாப்பிட நேரமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எங்க வீட்டில் தினமும் ஒரு கீரை என்பது உண வில் கட்டாயம் இருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் மூலிகை வகை கீரை களையும் உணவில் சேர்ப்பது வழக்கம். இவற்றை முறையாக செய்து சாப்பிட பலருக்கு நேரமிருப்பதில்லை. ஆனால் அதையே தொக்கு வடிவத்தில் கொடுத் தால், அதனை தினமும் உணவில் சேர்த் துக் கொள்ள முடியும். ஆரோக்கியமும் கிடைக்கும் என்ற எண்ணத்தில்தான் நான் இந்த பிசினசையே ஆரம்பிச்சேன்.
என் சொந்த ஊர் ஈரோடு. எனக்கு சின்ன வயசில் இருந்தே ஆசிரியராக வேண்டும் என்பதுதான் ஆசை. முதுகலை பட்டப்படிப்பு முடித்து ஒரு வருடம் ஆசிரி யர் வேலை பார்த்து வந்தேன். அதன் பிறகு பி.எட் படித்தால்தான் அந்த வேலை யில் தொடர்ந்து இருக்க முடியும் என்ற சூழ்நிலை வந்தது. அதனால் பி.எட்டும் படித்து முடித்து, ஆசிரியர் பணியில் ஈடு பட்டு வந்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. அந்த நேரத்தில் என் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் நான் பார்த்து வந்த ஆசிரியர் வேலையை ராஜினாமா செய் தேன். வீட்டில் அப்பாவிற்கு அனைத்தும் நான்தான் பார்த்து பார்த்து செய்து வந் தேன். அப்போது அவரின் உடல் நிலை சரியாக மருந்துகள் சாப்பிட்டாலும், நாம் சாப்பிடும் உணவு மூலமாகவும் அவரின் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பது அவசியம் என்று நினைத்தேன். அதனால் மூலிகை தலைகள் மற்றும் இலைகள் குறித்து படித்து தெரிந்து கொண்டேன். எந்த மூலிகை என்ன வேலை செய்யும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

வரப்போகிறது புதிய வைரஸ்!
உலகில் அடுத்து ஒரு வைரஸ் கிளம்ப இருக்கிறது. இது கொரோனா வைரஸை விட 7 மடங்கு சக்தி வாய்ந்தது.

கண்களுக்கு விருந்தளிக்கும் புகைப்படத் திருவிழா!
ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தினை ஒரு புகைப்படத்தில் விளக்கிடலாம்.

குளிர் காலமும் வைட்டமின்களும்!
எவ்வளவு வெயிலை வேண்டு மானாலும் தாங்கிக் கொள்ளலாம்.

Sparkling Christmas....
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி விட்டது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும்.

நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.

கிறிஸ்துமஸ் கேக்!
கிறிஸ்து மஸ் என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான்.

நம் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு “நாமே வண்ணம் தீட்டலாம்!
வீட்டை அலங்கரிக்க நாம் பலவிதமான பொருட் களை வாங்குவோம்.

உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்
உங்கள் இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்கிற நேரத்தில் உங்கள் பெட்ரோல் வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றப்படும்.