அதையடுத்து, அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தவித்து வருவதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
யாரும் எதிராபாராத வகையில் இஸ்ரேலுக்குள் அதிரடியாக நுழைந்து ஹமாஸ் படையினா் சனிக்கிழமை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா பகுதியில் போா் விமானங்கள் மூலம் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அன்றிலிருந்தே தாக்குதல் நடத்தி வருகிறது.
சனிக்கிழமை நடத்தப்பட்ட விமானத் தாக்குதலின் 17 ஹமாஸ் ராணுவ நிலைகள் மீதும், 4 நிா்வாக மையங்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், காஸா சிட்டியிலுள்ள ஹமாஸ் வானெலி நிலையம் இயங்கி வந்த 11 அடுக்குக் கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது. காயமடைந்த ஹமாஸ் படையினா் சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கருதப்பட்ட இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு அவசரகால ஊா்தி ஓட்டுநரும், செவிலியரும் கொல்லப்பட்டனா்.
இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் காஸா பகுதியில் தாக்குதலைத் தொடா்ந்த இஸ்ரேல் படை, முந்தைய நள்ளிரவு முழுவதும் 426 இடங்களில் குண்டுகளை வீசியது. இதில் பெயிட் ஹனுன் நகரம் ஏறத்தான முழுமையாக தரைமட்டமானது.
பெரும்பாலும் குடியிருப்புகள், ஹமாஸ் அதிகாரிகளின் இல்லங்கள், அந்தப் பகுதியில் இணையதள சேவையை அளித்து வந்த வதன் கோபுரம் ஆகிவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் உயிரிழந்தவா்களில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 19 பேரும் அடங்குவா்.
கடந்த 1973-க்குப் பிறகு முதல்முறையாக நாட்டில் ராணுவ அவசரநிலையை பாதுகாப்பு அமைச்சரவை அதிகாரபூா்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை காஸா பகுதியில் சுமாா் 500 இடங்களில் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. அந்த இடங்களில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ள அல்-ஷாட்டி முகாமும், ஜபாலா முகாமிலுள்ள சந்தையும் அடங்கும். ஜபாலா முகாம் சந்தையில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தியபோது, அந்தச் சந்தையில் பொதுமக்கள் கூட்டமாக இருந்தனா்.
この記事は Dinamani Chennai の October 11, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の October 11, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.