முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலம் வரை இந்த வாக்கு வங்கி தக்கவைக்கப்பட்டது. கடந்த 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 48 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது.
2006-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தாலும், மேற்கு மண்டலத்தில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளில் இருந்து 16 பேர் சட்டப் பேரவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி, மேற்கு மண்டலத்தில் 61 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 55 தொகுதிகளைக் கைப்பற்றியது. 2016-இல் 47 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதேபோல, 2009 மக்களவைத் தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது.
2014 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளை வென்றது. கன்னியாகுமரியில் பாஜகவும், தருமபுரியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவும் வென்றன. ஒரு தொகுதியில்கூட திமுகவோ அதன் கூட்டணிக் கட்சிகளோ வெற்றி பெறவில்லை. மேற்கு மண்டலத்தில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகளின் மறைவுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட்டு, 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் திமுக கொடி நாட்டியது.
この記事は Dinamani Chennai の February 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の February 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.