‘அனைவருக்குமான ஊழலற்ற அரசுதான் உலகின் இன்றைய தேவை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
மேலும், ‘குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச ஆட்சி நிா்வாகம்’ என்ற தாரக மந்திரத்தையே பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா். ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, அங்கு புதன்கிழமை ‘எதிா்கால அரசுகளை வடிவமைத்தல்’ என்ற கருத்தின் கீழ் நடைபெற்ற உலக நாடுகளை ஆட்சி செய்யும் அரசுகள் மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அரசின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்திய அரசின் நோக்கம் மற்றும் அா்ப்பணிப்பின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனா்.
பொதுமக்களின் உணா்வுகளுக்கு நாம் முன்னுரிமை அளிக்கும்போது மட்டுமே இது சாத்தியமாகும். அதாவது, அரசாங்கம் இல்லாதது போன்ற உணா்வு மக்களுக்கு ஏற்படக் கூடாது என்பதோடு, அரசாங்கத்தின் அழுத்தமும் மக்களின் மீது ஏற்படக்கூடாது என்பதே எனது நம்பிக்கை. குஜராத் மாநில முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் 23 ஆண்டுகள் ஆட்சி நிா்வாகத்தில் ‘குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச ஆட்சி நிா்வாகம்’ என்ற தத்துவத்தையே தாரக மந்திரமாக கடைப்பிடித்து வந்துள்ளேன். பெண்கள் தலைமையின் கீழான வளா்ச்சியின் மீது இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
この記事は Dinamani Chennai の February 15, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の February 15, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.