சட்ட மசோதாவுக்கு கர்நாடக மாநில தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சட்ட மசோதா நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை கட்டாயமாக்கும் வகையில் "கர்நாடக மாநில உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா 2024' க்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு விகிதம்: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேலாண்மை வேலைகளில் 50 சதவீதம், மேலாண்மை அல்லாத வேலைகளில் 75 சதவீதம், "சி', "டி' பிரிவு வேலைகளில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வழங்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
இந்த சட்டத்தின்படி பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படிக்காதவர்கள், கன்னடத் தேர்வைத் தனியாக எழுதித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சட்ட மசோதாவின் விதிகளை அமல்படுத்துவதற்கென உதவி தொழிலாளர் ஆணையர் அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். சட்ட விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 18) தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருந்தார்.
この記事は Dinamani Chennai の July 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の July 18, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அரசமைப்புச் சட்ட நிபுணர் ஏ.ஜி.நூரானி (94) காலமானார்
எழுத்தாளரும், அரசமைப்புச் சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற முன்னாள் வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரானி (94) மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை காலமானார்.
அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொழில் நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம்
தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
கவிதா ஜாமீன் குறித்து விமர்சித்த விவகாரம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ.90.52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ
ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக 'தி ராய்ட் டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு
யுபிஐ, ரூபே அட்டையை சா்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.