இதையடுத்து, 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.
முதல் இன்னிங்ஸில் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்ட மண்ணின் மைந்தனான ரவிச்சந்திரன் அஸ்வின், 2-ஆவது இன்னிங்ஸில் அட்டகாசமாக 6 விக்கெட்டுகள் சாய்த்து இந்தியா வெற்றிக்கு வழிவகுத்தார். 113 ரன்கள் விளாசி, 6 விக்கெட் டுகளும் சாய்த்து சென்னையை தனது கோட்டையாக மீண்டும் நிரூபித்த அவர் ஆட்டநாயகன் ஆனார்.
சென்னையில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீசத் தயார் ஆனது. முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, 144 ரன்களுக்கே விக்கெட் டுகளை இழந்து தடுமாறியது. பிரதான பேட்டர்கள் சோபிக்காமல் போன நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த பௌலிங் ஆல்ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி, அணியை ருந்து மீட்டது.
அவர்கள் பங்களிப்புடன் 376 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இந்தியா. பின்னர் தனது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட இந்திய பௌலர்களின் வேகத்தில் விக்கித்து 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 'ஃபாலோ-ஆன்' வாய்ப்பை வழங்காமல், 2-ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இந்த முறை ஷுப்மன் கில் - ரிஷப் பந்த் பார்ட்னர்ஷிப், அணியின் ஸ்கோரை வலுப்படுத்த, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்தது இந்தியா.
この記事は Dinamani Chennai の September 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の September 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.