試すGOLD- Free

சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து
Dinamani Chennai|November 14, 2024
சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை மருத்துவரை ஏழு இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் அரசு மருத்துவருக்கு சரமாரி கத்திக்குத்து

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரேமா (51). இவரது மகன் விக்னேஷ் (26). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரேமா கடந்த 6 மாதங்களாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சில வாரங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரேமாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தாம்பரம் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்புகள் இருப்பதாகவும், புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் இந்த எதிர்விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது.

ஆத்திரத்தில் கத்திக்குத்து: இதனிடையே, மருத்துவமனையிலிருந்து வந்த தாய் பிரேமாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், ஆத்திரமடைந்த விக்னேஷ், கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு புதன்கிழமை (நவ.13) காலை 10 மணியளவில் சென்றார்.

この記事は Dinamani Chennai の November 14, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の November 14, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
ஐசிஎஃப் ரயில் கண்காட்சி நிறைவு
Dinamani Chennai

ஐசிஎஃப் ரயில் கண்காட்சி நிறைவு

சென்னை ஐசிஎஃப்- பில் 3 நாள்கள் நடைபெற்ற ரயில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இந்தக் கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Chennai

அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!

மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.

time-read
2 分  |
March 24, 2025
1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்
Dinamani Chennai

1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவேற்காட்டில் திமுக சார்பில் 1,000 பேருக்கு நல உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Chennai

மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி

மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
March 24, 2025
புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
Dinamani Chennai

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது

லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை

time-read
2 分  |
March 24, 2025
Dinamani Chennai

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
Dinamani Chennai

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..

நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

time-read
3 分  |
March 24, 2025
மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
Dinamani Chennai

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவே தேசிய கல்விக் கொள்கை
Dinamani Chennai

அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவே தேசிய கல்விக் கொள்கை

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 24, 2025
டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி
Dinamani Chennai

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

time-read
1 min  |
March 24, 2025

当サイトではサービスの提供および改善のためにクッキーを使用しています。当サイトを使用することにより、クッキーに同意したことになります。 Learn more