![மகாராஷ்டிர பாஜகவின் வெற்றிமுகம் ஃபட்னவீஸ்! மகாராஷ்டிர பாஜகவின் வெற்றிமுகம் ஃபட்னவீஸ்!](https://cdn.magzter.com/1574665526/1732399781/articles/jUshGk5PCKELRiobD9Ksys/1732412655768.jpg)
மகாராஷ்டிர பாஜகவின் வெற்றிமுகமாக அறியப்படும் தேவேந்திர ஃபட்னவீஸ், மூன்றாவது முறையாக மாநிலத்தை வழிநடத்தும் முதல்வா் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளாா்.
54 வயதான ஃபட்னவீஸின் அரசியல் வாழ்க்கை ஏற்றமும் பின்னடைவும் ஒருங்கே அமைந்தது. ஆா்எஸ்எஸ் தலைமையிடமான நாகபுரியைச் சோ்ந்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் அரசியல் குருவான பாஜகவின் மூத்த தலைவா் மறைந்த கங்காதா் ஃபட்னவீஸின் மகன் தேவேந்திர ஃபட்னவீஸ், 1989-இல் ஆா்எஸ்எஸ் மாணவா் பிரிவில் இணைந்து பொது வாழ்க்கையைத் தொடங்கினாா். 22 வயதில் மாநகராட்சி மன்ற உறுப்பினா் ஆனாா்.
மேயரிலிருந்து முதல்வா்...: நாகபுரியின் இளைய (27 வயது) மேயராகும்போதே பாஜகவில் ஒரு முக்கிய தலைவராக தனது நிலையை ஃபட்னவீஸ் வலுப்படுத்திக் கொண்டாா்.
பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் ஆதரவைப் பெற்றவராக 2014 சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வராக வேட்பாளராக அரசியலில் அசுர வளா்ச்சி கண்டாா் ஃபட்னவீஸ்.
நாகபுரியின் பரிசு: ஒரு பிரசாரக் கூட்டத்தின் போது, ‘நாட்டுக்கு நாகபுரியின் பரிசு ஃபட்னவீஸ்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டு பேசியது, அவா் மீதான பாஜக தலைமையின் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டியது.
この記事は Dinamani Chennai の November 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の November 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
தில்லியில் பலத்த நில அதிர்வு: அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்
தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.
சென்னை காவல் துறையில் 10 நவீன காவல் உதவி மையங்கள் திறப்பு
சென்னை காவல் துறையில் புதிதாக கட்டப்பட்ட 10 நவீன காவல் உதவி மையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சீமான் மீதான விஜயலட்சுமியின் புகாரை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், 12 வாரத்துக்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
2023-24-இல் பாஜகவுக்கு ரூ.4,340 கோடி வருவாய்: ஏடிஆர் அறிக்கையில் தகவல்
கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.4,340.47 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்க (ஏடிஆர்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெயரில் போலியாக ஆள்சேர்ப்பு: மத்திய அரசு எச்சரிக்கை
ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரில் பணிக்கு ஆள் சேர்க்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பு போலியானது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்ததுள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
போரூர் கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செவ்வாய்கிழமை (பிப். 18) நடைபெறவுள்ளது.
பாரதியார் பல்கலை.யில் தொலைநிலை, இணைய வழி பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திறந்தநிலை, தொலைநிலை, இணையவழிக் கற்றல் பிரிவுகளில் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அஸ்ஸாம் தமிழ்ச் சங்கத்தில் பிப். 23-இல் அகத்தியர் விழா
அஸ்ஸாம் தமிழ்ச் சங்கம், மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி ஆகியவை சார்பில் அகத்தியர் விழா, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள கிரிஜானந்தா சௌத்ரி பல்கலைக்கழகத்தில் பிப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அடையாறு புற்றுநோய் மையத்தில் உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு சிகிச்சை பெறவும் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.