I denne utgaven
May 18,2025
நான்கு நாள்கள் சண்டைக்கு ரூ.15,000 கோடி செலவு!
புதுடில்லி, மே 18 இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய பதற்றத்தின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. துல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக்கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
3 mins
‘கடவுள்' நம்பிக்கை என்பது அயோக்கியர்களுடைய வஜ்ராயுதமே!
இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு, பேசும்போதும் \"மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது” என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும்.
2 mins
மதம் எனும் விபரீதம்
மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறுவளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால், அவசரப்பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும் \"பழக்கம்\" \"பெரியோர் போன வழி\" என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாகக் கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை.

3 mins
மேட்டூர் அணை ஜூன் மாதம் திறப்பு : விவசாயத்திற்கு ஆயத்தமாகும் டெல்டா மாவட்டம்
காவிரி நீர் வினாடிக்கு, 1,060 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று (17.5.2025) 1,385 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம், 107.46 அடி, நீர் இருப்பு, 74.84 டி.எம்.சி.,யாக இருந்தது.

1 min
தலைமைச் செயற்குழுவின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
புதுச்சேரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
1 min
திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பிரச்சாரக் கூட்டம்
விருதுநகர், மே 18விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், 15.05.2025 வியாழன் மாலை 6 மணியளவில், மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகம் அருகில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
1 min
மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர்கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: மாலை 4 மணி இடம்: இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், எழும்பூர், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் பா. மணியம்மை (மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை) தலைமை: த. வழக்குரைஞர் சோ. சுரேஷ் (மாநில துணைச் செயலாளர், கழக இளைஞரணி) முன்னிலை: வி. பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ. கோபால் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் சு. குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
3 mins
10 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை
தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது.
1 min
மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை!
கேரள அரசு அறிவிப்பு

1 min
விடுபட்டவர்களைத் தேடிவரும் மகளிர் உரிமைத்தொகை
சென்னை, மே 18கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பலருக்கும் ஜூன் மாதம் பணம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் பயனாளிகள் அடுத்த மாதம் முதல் சேர்க்கப்பட உள்ளனர்.இதில் அரசு தந்த வீடுகளிலும் வசிப்பவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 min
ப்ளஸ் 2 மாணவர்களின் மறு தேர்வுக்கு வழிகாட்டல்
நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு எழுத வராத சுமார் 35,350 மாணவர்களுக்கு துணைத் தேர்வு எழுத உரிய வழிகாட்டல் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் (DEO) பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
அதிக அளவில் பெண்கள் படித்து வேலைக்கு செல்வதில் தமிழ்நாடு தனிச் சிறப்பு
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என இரு துறைகளிலும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே தனிச்சிறப்புமிக்க மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1 min
அரசுக் கலை கல்லூரிகளில் சேர 1.21 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.
1 min
“தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை”
கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது - வருமுன் காப்பதே அறிவுடைமை” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கே அறிக்கையாக வெளியிட்டார்!

2 mins
கர்னல் சோபியா குறித்த அவமரியாதை பேச்சு மத்தியப் பிரதேச அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு
கர்னல் சோபியா குரேஷி குறித்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், அரசமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளார்.
1 min
கூகுளின் ஆதிக்கத்திற்கு சவாலா?
நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
1 min
பொதுமக்கள் நலன் கருதி ரேசன் கடைகளில் 2 மற்றும் 5 கிலோ சமையல் எரிவாயு உருளை விற்பனை
தமிழ்நாடு அரசின் பாராட்டத்தக்க இந்த ஏற்பாட்டிற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி
1 min
தமிழ்நாடு இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையில் இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
1 min
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டில் கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல்
மகாராட்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
தமிழ் நாட்டில் பொது விநியோக திட்டத்தில் பயன்பெறவும், நலத் திட்டங்களை பெறவும் குடும்ப அட்டை மிக முக்கியமானதாக பார்க்கப் படுகிறது.

1 min
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் அய்ந்தாண்டு எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு
1 min
வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய தகவல்கள்
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் நான்கு நியமனதாரர்களின் வசதியைப் பெற்ற பிறகு, இப்போது மற்றொரு மாற்றம் நடக்கப்போகிறது. அனைத்து நியமனதாரர்களின் மின்னஞ்சல் அய்டி மற்றும் தொலைபேசி எண்ணை வங்கிகள் உங்களிடம் கேட்கலாம்.

1 min
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt