
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த தக்னி முஸ்லிம் மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் முகமது அப்துர் ரஹ்மான் - மும்தாஜ் பேகம் தம்பதி. அப்துர் ரஹ்மான், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர்.
இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள். இவர்களில் கடைக்குட்டிதான் வஹீதா ரஹ்மான். 1938 பிப்ரவரி 3 அன்று பிறந்தார். சிறு வயதாக இருக்கும் போதே, இவரும் இவரது சகோதரிகளும் சென்னையில் பரத நாட்டியம் பயின்றனர்.
இப்படி நாட்டியம் பயின்றாலும் உண்மையில் வஹீதாவுக்கு மருத்துவராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், காலம் இவரை நடிகையாக அழகு பார்த்தது.குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வஹீதா வாழ்ந்து வந்தபோது ஒருநாள் இடி இறங்கியது.
ஆம். வஹீதாவின் இளமைக் காலத்திலேயே அவரது தந்தை அப்துர் ரஹ்மான் திடீரென்று காலமானார். விளைவு, குடும்பம் நிலைகுலைந்தது. அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது. போதும் போதாததற்கு குடும்பத்தின் பொருளாதார நிலையும் கவலைக்கிடமானது.
இச்சூழலில் தனது கனவான மருத்துவர் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கற்றுக்கொண்ட பரதம் துணையுடன் சினிமாவில் நடனக் கலைஞராக நுழைந்தார் வஹீதா ரஹ்மான்.
1955ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜெய்சிம்மா’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதே ஆண்டு தெலுங்கில் வெளியான அக்கினேனி நாகேஸ்வர ராவின் ‘ரோஜுலு மாராயி’ (Rojulu Marayi) படத்தில் ஒரு நாட்டுப்புற பாடலில் மட்டும் நடனமாடினார். தொடர்ந்து தமிழில் எம்ஜிஆர், பி. பானுமதி நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1956) திரைப்படத்திலும் நடித்தார்.
இக்காலத்தில்தான் தற்செயலாக, இந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான குருதத் பார்வையில் வஹீதா விழுந்தார்.அதன்பிறகு இவரது வாழ்க்கை, இவரே எதிர்பார்க்காத அளவுக்கு மாறியது.உண்மையில் இதற்காக ஒரு எருமை மாட்டுக்குத்தான் வஹீதா நன்றி சொல்ல வேண்டும்!ஆம். குருதத் வாழ்க்கையில் ஒரு எருமை மாடு குறுக்கிட்டதன் வாயிலாகத்தான், அவர் வஹீதா ரஹ்மானைக் கண்டடைந்தார்.
Denne historien er fra 13-10-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 13-10-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!
பிரகலாதனி அம்மாதான் கயாது!

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்
ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார்.

ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?
செங்கனி‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல்.

இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு டிரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது நாட்டையே குலுக்கியது.

அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

வைரல் நெக்லஸ்!
சோஷியல் மீடியாவில் நெக்லஸ் வைரலாகும். அதுவும் செலிபிரிட்டியின் நெக்லஸ் என்றால் வைரலோ வைரலாகும். செலிபிரிட்டியிலும் பிரியங்கா சோப்ரா என்றால் இன்ஃபினிட்டி வைரல் ஆகும்!

6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்
இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்