
‘இயற்கைக்கான உலகளவிலான நிதியம்’ (World wide fund for Nature) எனும் அமைப்பின் ‘த லிவிங் ப்ளானட் இண்டெக்ஸ்’ (the living planet index) எனும் அறிக்கைதான் உலகம், இந்தியா மற்றும் சென்னை தொடர்பாக இருக்கும் சதுப்பு நிலங்களின் தலையெழுத்தை ஆராய்ந்து இப்படி ஒரு குண்டை சென்னை மேல் போட்டிருக்கிறது.
சென்னை பற்றி இந்த அறிக்கை என்ன சொல்கிறது?
‘சதுப்பு நிலம் என்பது நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்பதோடு, வெள்ளத் தடுப்பாகவும் திகழ்கின்றன. நீர்வளத்தை பாதுகாப்பதால் நீர் மட்டுமல்லாது பல்வேறு வறட்சிகள் தடுக்கப்படுகின்றன.
இந்த ரீதியில் எடுத்துக்கொண்டால் சென்னையில் இப்போது வெறும் 15 சதவீத சதுப்பு நிலங்கள்தான் மிச்சமாக இருக்கிறது. சென்னையில் 2015 மற்றும் 2023களில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களுக்கு இந்த சதுப்பு நிலங்களின் அழிவே காரணம்...’ என்று சொல்லும் அந்த அறிக்கை சதுப்பு நிலங்களின் பயன்கள் குறித்தும் பட்டியலிடுகிறது.
‘நீர் மாசை நீக்குகிறது. வண்டல் மண்ணை தடுத்து வைக்கிறது. வலசை பறவைகளின், விலங்குகளின் வாழிடமாக இருக்கிறது. விதவிதமான தாவரங்களை உற்பத்தி செய்கிறது. மொத்தமாக சொன்னால் மழை நீரை பஞ்சு மாதிரி பொத்தி பொத்தி பொதிந்து வைத்துக்கொண்டிருக்கிறது’ என்று சொல்கிறது.சென்னையின் முக்கியமான சதுப்பு நிலங்கள் பள்ளிக்கரணை, பழவேற்காடு மற்றும் எண்ணூர் கடற்கழி எனும் எண்ணூர் க்ரீக் (Ennore creek) ஆகியவை. பள்ளிக்கரணையை எடுத்துக்கொண்டால் அதில் சுமார் 10 சதவீத நிலப்பரப்பே இப்போது மிஞ்சியிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தப்படுகிறார்கள்.
எண்ணூர் கடற்கழிமுகத்திலும் தனியார் நிறுவனங்களின் துறைமுக அறிமுக பணியால் மக்கள் பயந்துகிடக்கிறார்கள். பழவேற்காடும் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் குறித்து தொடர்ச்சியாக எழுதி வரும் வனவிலங்கு ஆராய்ச்சியாளரான கண்ணன் வைத்தியநாதனிடம் சென்னையின் சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினோம்.
Denne historien er fra 22-11-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 22-11-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

வெப்ப அலையால் தமிழ்நாடு பொருளாதாரத்துக்கு பாதிப்பு?
அப்படித்தான் தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை எச்சரிக்கிறது.வெப்ப அலை காரணமாக ஒரு நாளில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தால், அது மோசமான வெப்ப அலை நாள் எனப்படுகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டமா அல்லது தகவல் பெற முடியாத உரிமைச் சட்டமா?
இப்படியொரு கேள்வியைத்தான் ஒன்றிய அரசு இப்பொழுது பொது மக்கள் மனதில் எழுப்பியிருக்கிறது.தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) இந்திய நாடாளுமன்றத்தில் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

கண் சிமிட்டும் டிராகன் கேர்ள்!
பிரகலாதனி அம்மாதான் கயாது!

ஊழலில் இந்தியாவுக்கு எந்த இடம்?
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனம் ‘உலகிலேயே அதிக ஊழல் நிறைந்த நாடு எது?’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

2 ஆயிரம் தோல்விகளுக்குப் பின் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பானியர்
ஆம். ஒன்றல்ல இரண்டல்ல... ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் கடந்த 8 வருடங்களாக இந்த துணையைத் தேடும் பயணத்திலேயே தங்கிவிட்டார்.

ஒரூபால் காதலராக நடித்ததில் என்ன தவறு?
செங்கனி‘ஜெய்பீம்’ செங்கனியாக தமிழ் சினிமாவில் ஆழமாக தடம் பதித்தவர் லிஜோமோல்.

இங்கிலாந்திலும் இந்தியர்கள் நுழைய தடா!
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு டிரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது நாட்டையே குலுக்கியது.

அஜித் டூப் போட மாட்டார்...குட் பேட் அக்லி மாஸா இருக்கும்!
புதுமுகமாக இருந்தாலும் முதல் படத்திலேயே பறந்து பறந்து சண்டைபோட ஆசைப்படுவார்கள். காரணம், ஹீரோக்களுக்கு எப்போதும் பேர் வாங்கித் தருவது ஆக்ஷன் படங்கள்தான். அந்த வகையில் திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராகத் திகழ்கிறார் சுப்ரீம் சுந்தர்.

வைரல் நெக்லஸ்!
சோஷியல் மீடியாவில் நெக்லஸ் வைரலாகும். அதுவும் செலிபிரிட்டியின் நெக்லஸ் என்றால் வைரலோ வைரலாகும். செலிபிரிட்டியிலும் பிரியங்கா சோப்ரா என்றால் இன்ஃபினிட்டி வைரல் ஆகும்!

6 புதுமுகங்கள்...அதுல 2 பேர் உதவி இயக்குநரா இருந்தவங்க! இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்
இது தனுஷ் கொடுக்கப்போகும் #NEEK (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) ட்ரீட்