
அமெரிக்கா, ரஷியா, சீனா, இந்தியா என பல்வேறு நாடுகள், பல ஆண்டுகளாக செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் ஆயுள் முடிந்த அல்லது செயிலிழந்த ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் விண்வெளியில் கழிவுகளாக சுற்றி வருகின்றன.
பொதுவாக, மிதந்து கொண்டிருக்கும் விண்வெளிக் கழிவுகளின் சராசரி வேகம் நொடிக்கு 10 கிலோமீட்டர். அதிகபட்ச வேகம் நொடிக்கு 16 கிலோமீட்டர்.
இவ்வாறு சுற்றித் திரியும் கழிவுகளால் செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு அபாயம் ஏற்படுகிறது.
இந்த விண்வெளி குப்பைகள் புவி சுற்றுப்பாதையில் 600 கிமீக்கு கீழே என்கிற நிலை இருக்குமானால் சில ஆண்டுகளுக்குள் பூமிக்கு திரும்பும். அதுவும் புவி உயிர்களுக்கு பாதிப்பாக அமையும்.
உலக புகழ் கார்பரேட் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அதிவேக இணைய சேவைக்காக 900க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏற்கனவே ஏவியுள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை செலுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆராய்ச்சி நிறுவனமான யூரோகன்சல்ட், 2018 முதல் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 990 செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்று சொல்லியது. அந்நிலை தொடர்ந்தால், 2028ல் 15,000 செயற்கைக்கோள்கள் பூமியை வட்டமிடும் சுற்றுப்பாதையில் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.
இப்படி விண்வெளி 'ஹவுஸ்புல்' போர்டு பொடப்படும் நிலையில்... விண்வெளிக் குப்பைகள் மணிக்கு 35,000 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறையாமல் பயணிப்பதால், அவை தாக்கும் எந்தவொரு பொருளுக்கும் கணிசமான சேதத்தை ஏற்படுத்தும்.
1978லேயே நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் டொனால்டு ஜெ.கெஸ்லர் முன்மொழிந்த கெஸ்லர் குறைபாடு, விண்வெளிக் கழிவுகள் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தது. அதற்கேற்ப, 1996ல் பிரெஞ்சு செயற்கைக்கோள் ஒன்று கழிவுப் பொருள் மோதியதனால் சேதமுற்றது. இதே போன்று 2009ல் அமெரிக்காவின் செயற்கைக் கோள் ஒன்று ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியதில் அழிந்தது.2007ல் சீனா தான் ஏவிய செயற்கைக்கோள் ஒன்றை சோதனைக்காக எவுகணை மூலம் மோதிச் சேதப்படுத்தியதில், அச்செயற்கைக்கோள் 150,000 சிறிய துண்டுகளாக விண்வெளிக் கழிவுகளில் சேர்ந்தது.
Denne historien er fra July 27, 2022-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 27, 2022-utgaven av Kanmani.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

எனக்கு எது பிடிச்சிருக்கோ அதை செய்யுறேன்!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

நம்மை நாமே நேசிக்கணும்!
மலையாளத்தில் அறிமுகமான ரெபா மோனிகா ஜான், பிகில், எப்.ஐ.ஆர், ஜருகண்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.

படிப்புக்கும் டீக்கடைக்கும் என்ன தொடர்பு?
பொதுவாக தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடம் நாம் பேசினால் அவர்களிடையே பல்வேறு கவலைகள் இருப்பதை உணர முடியும். 'படிச்சதெல்லாம் மறந்துடுது, கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருந்தது, என்பதில் தொடங்கி நிறைய அரியர்ஸ் இருக்கு என்பது வரை பிரச்சனைகளின் பட்டியல் மிகப்பெரியது.

வியூகம் வகுக்க பிடிக்காது!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், மார்க் ஆண்டனி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்ட அழகி ரிதுவர்மா.

கனவை நினைவுபடுத்த முடியுமா?
உறக்கத்தில் கனவு காணாதவர்கள் என்று யாருமே கிடையாது. அப்படி கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் விடிந்து எழுந்ததும் அந்த கனவு என்னவென்று கேட்டால் அதை ஞாபகப்படுத்தி சொல்வது கடினம்.

அயிட்டம் டான்ஸ்...டிரெண்டாகும் நடிகைகள்!
புதுமையான கதைகள், வித்தியாசமான காட்சியமைப்புகள் என தொழில்நுட்ப ரீதியாக சினிமா பல மாற்றங்களை கண்டுள்ள போதிலும் மாறாத ஒரே விஷயம் என்றால் அது அயிட்டம் டான்ஸ் தான்.

ஆரோக்கியத்திற்கு உதவும் செம்பு பாத்திரங்கள்!
இன்று நாம் சமையல் செய்ய, சாப்பிட எவர்சில்வர் பாத்திரங்களை அதிகமாக உபயோகப் படுத்துகிறோம்.

உலக மகளிர் தினம் !
1910இல் டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற 'சர்வதேச சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு' மகளிர் தினக் கொண்டாட்டம் தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது.

வயகரா காளான் தேடி அலையும் இளசுகள்!
போதை மாத்திரை, போதை சாக்லேட்டுகள் என விதவிதமான போதை வஸ்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாக இன்று இளைய தலை முறையினர் அதன் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

ஆச்சரிய மூட்டும் இரட்டையர்கள் கிராமங்கள்!
ஒரே மாதிரி 9 பேர் இருப்பார்கள் என கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால் ஒரே மாதிரி இரட்டையர்களைத்தான் பார்த்து வியந்து இருக்கிறோம். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 60 இரட்டை குழந்தைகள் ஒரே பள்ளியில் படித்து வரும் தகவல் ஆச்சர்ய செய்தியாகி உள்ளது.