நெடுஞ்சாலைத் துறை! ஊழல் அதிகாரிக மிரட்டி பணவசூல்!
Nakkheeran|November 02-05,2024
கடுமையாக உழைத்துச் சம்பாதித்து முன்னேறுவதெல்லாம் நடைமுறைக்குச் சரிவராது. கொஞ்சம் மாற்றி யோசித்தால், அதையும் கிரிமினல்தனமாகச் செயல்படுத்தினால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற கெட்ட சிந்தனையுடன், தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் பணத்தைக் குவித்துவருகிறது, சட்டத்தின் நுட்பங்களை நன்கறிந்த ஒரு கும்பல்.
ராம்கி
நெடுஞ்சாலைத் துறை! ஊழல் அதிகாரிக மிரட்டி பணவசூல்!

மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இவர்கள் கையில் எடுத்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ள சட்டபூர்வமான உரிமையை, இவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் யாரைக் குறிவைக்கிறார்கள் தெரியுமா? ஊழலும் லஞ்சமும் பெருக்கெடுத்து அரசுத்துறையில் ஓடும் பணியாற்றும் அலுவலர்களைத்தான். அப்படி ஒரு துறையாகத்தான் இருக்கிறது, நெடுஞ்சாலைத்துறை.

அத்துறையில் முறைகேடாகப் பணம் குவித்துவரும் பொறியாளர்கள், இந்த கும்பலால் வேட்டை யாடப்படுகின்றனர்.

சாம்பிளுக்கு...விவகாரம் லீக்கான விருதுநகர் கோட்டத்தின் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம்.

நாம் களமிறங்கி அக் கோட்டத்தில் விசாரித் தறிந்த தகவல்கள் இதோ: சுமார் 33 கி.மீ. தூரத்துக்கு சிவகாசி சுற்றுச் சாலை அமையவிருக்கிறது. நிலம் கையகப் படுத்துதல் உள்ளிட்ட சாலைப் பணிகளுக்கு சுமார் ரூ.200 கோடி வரை செலவிட நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற நிதி ஒதுக்கீடு அதிகமுள்ள பகுதிக்கு இட மாறுதல் பெற நடத்தப்படும் மறைமுக ஏலத்தில் பல லட்சங்களை வாரியிறைத்துவிட்டே வருகிறார்கள் உதவி கோட்டப் பொறியாளர்கள். ஏனென்றால், மதிப்பீட்டில் 1 சதவீதம் வரை சம்பந்தப்பட்ட பொறியாளருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

தற்போது சிவகாசியில் உதவி கோட்டப் பொறியாளராக இருக்கிறார் காளிதாஸ். பசையான ஏரியாவில் காளிதாஸ் பணியில் இருப்பதை ஸ்மெல் செய்துவிட்ட ஜெகதீசன் என்பவர்,

கோயம்புத்தூரிலி ருந்து அறப்போர் இயக்கம் லெட்டர் பேடில், தகவல் அறி யும் உரிமைச் சட் டத்தின் கீழ் சிவகாசி சுற்றுச்சாலைகள் குறித்த சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, சிவகாசி உதவி கோட்டப் பொறியாளர் காளிதாஸின் சொத்து விபரங்களையும் கேட்டுள்ளார். அந்தத் தகவல் கேட்கும் விண்ணப்ப மனுவை முறைப்படி விருது நகர் கோட்டப் பொறியாளர் அலுவல கத்துக்கு அனுப்பாமல், உள்நோக்கத்துடன் சிவகாசி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.

சொத்து விபரங்களைக் கேட்டு, தனது அலுவலகத்துக்கு வந்த மனுவைப் படித்ததும் அதிர்ந்துபோனார் காளிதாஸ்.

Denne historien er fra November 02-05,2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 02-05,2024-utgaven av Nakkheeran.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA NAKKHEERANSe alt
ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?
Nakkheeran

ஏன் தந்தை பெரியார் முக்கியமான தலைவர்?

இவையெல்லாம் உரிமைகளாக பெற்றவை என்பதைக்கூட அறிய முடியாத அளவுக்கு நாம் வசதியாக வாழும் இந்த வாழ்வு, சமூகம், நமக்கான சட்ட பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம், வழிபாடுகள் போன்றவை யாவும் நமக்கிருந்திராத காலத்தை கற்பனை செய்து பாருங்கள்.

time-read
2 mins  |
March 05-07, 2025
த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!
Nakkheeran

த.வெ.க தனித்துப் போட்டி! குழப்பும் பிரசாந்த் கிஷோர்!

பிரஷாந்த் கிஷோர் சமீபத்தில் அளித்த பேட்டி த.வெ.க. வட்டாரத்தை கதிகலங்கச் செய்துள்ளது.

time-read
2 mins  |
March 05-07, 2025
மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!
Nakkheeran

மாணவி தற்கொலை! மூடிமறைக்கும ஆசிரமம்!

பெரிய கல்வி நிறுவனங்கள், குழந்தைகள் விடுதிகள், ஆசிரமங்களில் பெண் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்தால், தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாதென்பதற்காக விசாரணை அதிகாரிகளுக்கு பணத்தைக்கொடுத்து சரிக்கட்டும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

time-read
2 mins  |
March 05-07, 2025
தலைவர்களின் பலமும் பலவீனமும்!
Nakkheeran

தலைவர்களின் பலமும் பலவீனமும்!

தனி நபருக்கானாலும், கட்சிகளுக்கானாலும், ஆட்சிகளுக்கானாலும், ஒரு சமூகத்துக்கானாலும் மிகவும் ஜாக்கிரதையாகக் கண்காணிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும். இதை அண்ணா இப்படிச் சொன்னார்....

time-read
2 mins  |
March 05-07, 2025
முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!
Nakkheeran

முதல்வர் கூட்டத்தில் அ.தி.மு.க.-பா.ம.க.! அதிர்ச்சியில் டெல்லி!

ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72ஆவது பிறந்த நாள், அனைத்துத் தரப்பாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.\"

time-read
4 mins  |
March 05-07, 2025
போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்
Nakkheeran

போக்ஸோ வழக்கில், ஐக்கியைப் பற்றி பெசக்கூடாது! - மிரட்டிய போலீஸார்

'போக்ஸோ வழக்கின் எப்.ஐ.ஆர். நகல் தருகின்றோம். வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என அழைத்து, 'ஜக்கியைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாதென' பாதிக்கப்பட்டோரை மிரட்டி எழுதி வாங்கி அனுப்பியிருக்கின்றது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம். சரி... எப்.ஐ.ஆர். நகலாவது தந்தார்களா, என்றால் அதுவும் இல்லை.

time-read
2 mins  |
March 05-07, 2025
3வது உலகப் போர் மூளுமா?
Nakkheeran

3வது உலகப் போர் மூளுமா?

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காரசார விவாதமானதால், சர்வதேச அளவில் பதட்டம் கிளம்பியுள்ளது!

time-read
2 mins  |
March 05-07, 2025
மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!
Nakkheeran

மஜா மசாஜ் சென்டர்கள்!-குமரி எஸ்.பி.தடாலடி!

நிர்வாண மசாஜ், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டல் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசியுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டானாக வலம் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் விஜய்ஆனந்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது குமரி காவல்துறை.

time-read
2 mins  |
March 05-07, 2025
கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!
Nakkheeran

கலெக்டர் அதிரடி! பதறும் அதிகாரிகள்!

கடந்த மாதம் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது கலெக்டராக சரவணன் பொறுப்பேற்ற வுடனே மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கும் அதிரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கோரிக்கைகளைக் கேட்டது மட்டு மல்லாமல், பல்வேறு துறைகளுக்கு சென்று விசிட்டடித்து, ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளையும் பார்வை யிட்டு, சரியாக செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக் கிறார்.

time-read
2 mins  |
March 05-07, 2025
நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!
Nakkheeran

நான் யார் தெரியுமா? அலுவலர்களை மிரட்டும் பெண்மணி!

திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் உதவி ஆணையாளர் ஜோதிலட்சுமியின் அலுவலகத்தில், பெங்களுரூவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமர்ந்துகொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவ தாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

time-read
2 mins  |
March 05-07, 2025