
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 52,500 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. 2 லட்சம் மீனவர்கள் 2ம் நாளாக முடங்கினர். மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடலில் மூழ்கியது. வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்றதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் (26ம்தேதி) தொடங்கிய கனமழை நேற்று 2ம் நாளாக விடாமல் பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று காலை வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நாகப்பட்டிம் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது.
நேற்றும் மழை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணைகளின் கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1500 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள், திருவாரூர் மாவட்டத்தில் 1000 ஏக்கரில் ஒரு மாதமான இளம் சம்பா பயிர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. கடல் சீற்றத்தால் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 2 லட்சம் மீனவர்கள் நேற்றும் கடலுக்கு செல்லவில்லை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரி ஊராட்சி பாலூர் தெற்கு தெருவில் 150 ஆண்டு பழமையான வீட்டின் முன்பகுதி மழையால் இடிந்து விழுந்தது.
Denne historien er fra November 28, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 28, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

மாமல்லபுரம் அருகே பேரூரில் 4276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூரில், ரூ.4276.44 கோடி மதிப்பில் 85.51 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பீகாரில் லாலுவை விளாசிய பிரதமர் மோடி காட்டாட்சியை நடத்தியவர்கள் கும்பமேளாவை பழிக்கிறார்கள்
‘கால்நடை தீவனத்தை திருடியவர்கள், காட்டாட்சியை அறிமுகப்படுத்தியவர்கள் மகா கும்பமேளாவை மோசமாக பேசுகிறார்கள்’ என பீகாரில் பேசிய பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தை கடுமையாக தாக்கினார்.
வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை அபேஸ் செய்த ஹீரோ
வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பறித்துக்கொண்டார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்திருந்தார்.

குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் அகத்தியா
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜூன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘அகத்தியா’.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வங்கத்தை வீழ்த்திய நியூசி.
ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது.
திருவனந்தபுரத்தில் பயங்கரம் காதலி, தம்பி, பாட்டி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்துக் கொலை
திருவனந்தபுரம் அருகே தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை டாப் 10க்குள் நுழைந்த மிர்ரா ஆண்ட்ரீவா
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ரஷ்ய இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (17) முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 10 இடங்களுக்குள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசலாமா?
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கறிஞர் சுதா நேற்று வெளியிட்ட அறிக்கை: கும்பகோணத்தில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி பேசும் போது, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது.

அரையிறுதிக்கு செல்வது யார்? - ஆஸி - தெ.ஆ. கிரிக்கெட் போர்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 8வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில், தலா ஒரு வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
2,642 அரசு டாக்டர்கள் நியமனம் என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.