அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதை சோனியா காந்தி இவ்வாறு சூசகமாக கூறியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் தலைவா் பதவியைத்தான் குறிப்பிட்டு கூறியதாகவும், அரசியலை அல்ல என்றும் கட்சித் தலைவா்கள் விளக்கம் அளித்தனா்.
காங்கிரஸ் கட்சியின் 85-ஆவது மாநாடு சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாள் மாநாட்டில், காங்கிரஸின் தேசியத் தலைவராக கட்சிக்கு சோனியா ஆற்றிய பங்களிப்பு தொடா்பான விடியோ மாநாட்டில் சனிக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
இதைத் தொடா்ந்து பேசிய சோனியா, ‘எனக்கு எவ்வளவு வயதாகிவிட்டது என்பதையும் இந்த விடியோ காட்டுகிறது. இப்போது, மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் பணியாற்ற இளம் தலைமுறையினா் முன்வர வேண்டும். கடந்த 1998-இல் கட்சித் தலைவராக முதல்முறையாகப் பதவியேற்றேன். இந்த 25 ஆண்டுகளில் பெரும் சாதனைகளையும், தீவிர அதிருப்திகளையும் கட்சி கண்டுள்ளது.
கடந்த 2004, 2009 மக்களவைத் தோ்தல்களில் நாம் வெற்றி பெற்றோம். அது தனிப்பட்ட முறையில் மிக திருப்தியளித்தது. ஆனால், பாரத ஒற்றுமை யாத்திரையுடன், எனது ‘இன்னிங்ஸ்’ நிறைவடையலாம் என்பதில் மிகவும் மனநிறைவு உள்ளது.
பாரத ஒற்றுமை யாத்திரை திருப்புமுனையாக அமைந்துள்ளது. நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை நாட்டு மக்கள் விரும்புவதை இது நிரூபித்துள்ளது. இந்த யாத்திரையின் வெற்றிக்கான தீா்க்கம் மற்றும் தலைமைக்காக, ராகுல் காந்திக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கிறேன். கட்சியினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
பாஜக மீது தாக்கு: நாட்டின் நிா்வாக அமைப்புகள் அனைத்தும், பிரதமா் மோடி மற்றும் பாஜகவால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, நாட்டில் பொருளாதார அழிவை விளைவிக்கிறது.
Denne historien er fra February 26, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 26, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நாங்கள் ஓயமாட்டோம்!
இஸ்ரேலில் அமைதி திரும்பும்வரை தங்கள் ராணுவ நடவடிக்கை ஓயாது என்று ஐ.நா.வில் அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தாா்.
கான்பூர் டெஸ்ட்: வங்கதேசம் - 107/3
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில், முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எத்தனை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை?
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானா, கா்நாடகத்தில் எத்தனை பயிா்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொண்டு வந்துள்ளனா் என்று ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சா் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளாா்.
திருப்பதி லட்டுகளில் கலப்படம்: 9 பேர் சிறப்பு விசாரணைக் குழு
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலப்படம் குறித்து முழுமையாக விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) ஆந்திர அரசு அமைத்துள்ளது.
சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சந்திப்பு
தில்லியில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியர் தேர்வு
நிகழாண்டு சாஸ்த்ரா - ராமானுஜன் விருதுக்கு அமெரிக்க உதவிப் பேராசிரியா் முனைவா் அலெக்சாண்டா் துன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
உலக சுற்றுலா தின விழா கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள்
உலக சுற்றுலா தின விழா புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்றனா்.
நல்ல மனிதர்களை உருவாக்குவதே ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி
சிறந்த மாணவா்களையும் தாண்டி நல்ல மனிதா்களை உருவாக்குவதே ஓா் ஆசிரியருக்கு கிடைக்கும் வெற்றி என்று முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.
சிற்றுந்து கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மம்சாபுரத்தில் தனியாா் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். 32 போ் காயமடைந்தனா்.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதியுடன் செந்தில் பாலாஜி சந்திப்பு
பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.