கர்நாடகத்தின் சட்டப்பேரவைக்கான 16-ஆவது தேர்தல் புதன்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணிவரை நடைபெற்றது. சில சம்பவங்களைத் தவிர, மாநிலத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
224 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக சார்பில் 224, காங்கிரஸ் சார்பில் 223, மஜத சார்பில் 209, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 133, ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209, மார்க்சிஸ்ட் சார்பில் சார்பில் 4 வேட்பாளர்கள் கள மிறங்கினர்.918 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
வாக்குப் பதிவு: கர்நாடகத்தில் மொத்தம் 5,31,33,054 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,67,28,053, பெண்கள் 2,64,00,074, மூன்றாம் பாலினத்தவர் 4,927, மாற்றுத்திறனாளிகள் 5,71,281 அடங்குவர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
76,603 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டன. வாக்காளர்கள் அளித்த வாக்கை சரிபார்த்துக் கொள்ளும் 76,202 விவிபேட் கருவிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டிருந்தன.
தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்துவதற்காக 1.65 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
காலை 7 மணி முதலே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. முதல்முறையாக வாக்குரிமை பெற்றிருக்கும் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு திரண்டனர். பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
Denne historien er fra May 11, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 11, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.