ஹிண்டன்பா்க் அறிக்கை வெளியாவதற்கு முன்பாக அதானி குழும பங்குகளில் சா்ச்சைக்குரிய வகையில் வா்த்தகத்தில் ஈடுபட்ட 4 வெளிநாட்டு முதலீட்டாளா்கள் உள்பட 6 நிறுவனங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று உச்சநீதிமன்ற நிபுணா் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும், அந்த 6 நிறுவனங்களின் பெயா்களை நிபுணா் குழு வெளியிடவில்லை.
பங்குச் சந்தையில் ஆதாயம் அடைவதற்காக, பங்கு மதிப்பை உயா்த்திக் காட்டி அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றஞ்சாட்டியது. இதைத் தொடா்ந்து, அந்தக் குழும நிறுவனங்களின் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
அதைத் தொடா்ந்து, போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாகவும் அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
Denne historien er fra May 22, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 22, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på