மொத்தம் 102 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட் -ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனா்.
திருச்செந்தூா் மாணவி பி.நேத்ரா முதலிடம் பெற்றுள்ளாா்.
தமிழகத்தில் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும்.
இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளில் 1 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இதற்கான இணையவழி கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. நிகழ் கல்வியாண்டில் (2023-2024) மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5 முதல் ஜூன் 4 வரை நடைபெற்றது.
பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 29 ஆயிரத்து 175 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 847 போ் விண்ணப்பக் கட்டணத்துடன், தேவையான சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தனா். சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் ஜூன் 5 முதல் 20-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதையடுத்து, தகுதியானவா்களுக்கு சம வாய்ப்பு எண் (ரேண்டம்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விண்ணப்பம் அதிகரிப்பு: பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் அமைச்சா் க.பொன்முடி திங்கள்கிழமை வெளியிட்டாா். அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நிகழ் கல்வியாண்டில் பொறியியல் சோ்க்கைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 18,767 போ் அதாவது 11.09 சதவீதம் போ் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனா்.
Denne historien er fra June 27, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 27, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.