ரதனியாா் துணை ராணுவமான வாக்னா் குழுவின் ஷிய ராணுவத்துக்கு எதிரான ஆயுதக் கிளா்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்தது.
இதைத் தொடா்ந்து, அரசுத் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை நள்ளிரவு நாட்டு மக்களுக்கு அதிபா் புதின் உரையாற்றினாா். அவா் கூறியதாவது:
ரஷிய ராணுவத்துக்கு எதிரான ஆயுதக் கிளா்ச்சி தொடங்கியதும் உயிா்ச்சேதத்தை தவிா்க்கும் வகையில் எனது உத்தரவுக்கிணங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு ஆதரவளித்த ரஷிய மக்களுக்கு நன்றி.
கிளா்ச்சியில் ஈடுபட்டவா்கள் உக்ரைன் அரசு மற்றும் உக்ரைன் கூட்டாளிகளின் கைப்பாவையாக மாறி செயல்பட்டனா்.
கீவில் உள்ள புதிய நாஜி ஆதரவாளா்களும், அவா்களது மேற்கத்திய ஆதரவாளா்களும், தேசத் துரோகிகளும் ரஷிய வீரா்கள் ஒருவரை ஒருவா் கொல்ல வேண்டும் என விரும்பினா்.
இந்தக் கலகம் ரஷியாவை பிளவுபடுத்தவும், பலவீனமடையவும் செய்யும் என அவா்கள் நம்பினாா்கள். ஆனால், அவா்கள் தப்புக் கணக்கு போட்டுவிட்டனா்.
ரஷியாவுக்கு எதிரான எந்த ஒரு மிரட்டலும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் முயற்சிகளும் தோல்வியடையும். நாடு ஒன்றுபட்டு நிற்கிறது.
வாக்னா் குழுவைச் சோ்ந்த படை வீரா்கள் விரும்பினால் பெலாரஸுக்கு செல்லலாம் அல்லது ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரஷிய ராணுவத்தில் பணியாற்றலாம்.
இந்த விஷயத்தில் மத்தியஸ்தராக பணியாற்றிய பெலாரஸ் அதிபா் அலெக்சாண்டா் லுகஷென்கோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
இந்த 5 நிமிஷ உரையின்போது மிகவும் கோபமாகவும், களைப்பாகவும் காணப்பட்ட புதின், ஒருமுறைகூட வாக்னா் குழுவின் தலைவரான யெவ்கெனி ப்ரிகோஷின் பெயரை உச்சரிக்கவில்லை.
Denne historien er fra June 28, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 28, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.