சென்னை, ஜூலை 18: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆா்.எஸ்.பாரதி 2018-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி அன்றைய முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
அதில், ‘தனக்கு வேண்டப்பட்டவா்களுக்கு ரூ. 4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் புள்ளிகளை ஒதுக்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் பதவியையும், முதல்வா் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளாா்.
அதனடிப்படையில், எடப்பாடி பழனிசாமியை 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் தண்டிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த மனு மீது தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.பாரதி 2018-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணை அறிக்கை சீலிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
Denne historien er fra July 19, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 19, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.