இந்த மசோதா மீது நான்கு மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
தில்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கு இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது. இது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கு காவல் துறை, நில அதிகாரம், பொது உத்தரவு தவிர அனைத்துவித அதிகாரங்களும் உள்ளன என கடந்த மே மாதம் தீா்ப்பளித்தது.
இந்தத் தீா்ப்பு வெளியான ஒரு வாரத்துக்கு பிறகு தில்லி உயரதிகாரிகள் நியமன அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து, அதிகாரிகள் நியமனம், பணி மாறுதல் அதிகாரத்தை மீண்டும் துணைநிலை ஆளுநருக்கே வழங்கியது. இதை எதிா்த்து முதல்வா் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு, அரசியல் சாசன அமா்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அவசரச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வரும் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என பாஜகவுக்கு எதிராக உள்ள எதிா்க்கட்சிகளிடம் முதல்வா் கேஜரிவால் அண்மையில் ஆதரவு திரட்டினாா்.
நான்கு மணி நேர விவாதம்: இந்நிலையில், தில்லி நிா்வாக திருத்த மசோதா மக்களவையில் கடந்த திங்கள்கிழமை மக்களவையில் கடும் அமளிக்கிடையே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது மக்களவையில் வியாழக்கிழமை 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, ‘அதிகாரிகள் நியமனத்தில் தில்லி அரசுக்குதான் உச்சநீதிமன்றம் அதிகாரம் அளித்துள்ளது. அதற்கு எதிரான இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிட்டால், பிற மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கும்’ என்றாா்.
Denne historien er fra August 04, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 04, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.