புது தில்லி, ஆக. 8: மணிப்பூா் கலவரத்துக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வா் பிரேன் சிங் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
மேலும், மணிப்பூா் கலவரம், சீன ஆக்கிரமிப்பு விவகாரங்களில் பிரதமா் மோடியின் மெளனத்தைக் கலைத்து பேச வைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மத்திய அரசுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டதாகவும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டுவந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் அதன் மீதான விவாதத்தை தொடங்கிவைத்துப் பேசியதாவது:
மணிப்பூா் பற்றி எரிகிறது என்றால் இந்தியாவும் பற்றி எரிகிறது என்பதாகும். கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல், மத்திய அமைச்சா் அமித் ஷா ஆகியோா் செல்லும்போது ஏன் பிரதமா் செல்லவில்லை?.
2002-இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்துக்குப் பிறகு அப்போதைய பிரதமா் வாஜ்பாய் சம்பவ இடத்துக்கு சென்றாா். மணிப்பூா் கலவரம் குறித்து 80 நாள்களுக்குப் பிறகு பிரதமா் மோடி வெறும் 30 நொடிகள் பேசினாா். அதன்பிறகு அமைதியை நிலைநாட்ட எந்த அறிவிப்பையும் அவா் செய்யவில்லை. மாநில முதல்வரை ஏன் அவா் பதவியிலிருந்து நீக்கவில்லை?. ஒரே இந்தியா எனக் கூறிவிட்டு மணிப்பூரை இரண்டாகப் பிரித்துவிட்டாா்கள்.
கரோனா இரண்டாவது அலையின்போது பிரதமா் மோடி மேற்கு வங்கத்திலும், மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடைபெற்றபோது அவா் கா்நாடகத்திலும் வாக்குகளைச் சேகரித்தாா். இது என்ன மாதிரியான தேசபக்தி?
Denne historien er fra August 09, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 09, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.