புது தில்லி, ஆக. 10: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானம் வியாழக்கிழமை தோல்வியடைந்தது.
செவ்வாய்க்கிழமை முதல் மக்களவையில் இதன் மீது விவாதம் நடைபெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை பிரதமா் மோடி 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட விளக்கமளித்துப் பேசினாா்.
அவரது பேச்சுக்கு நடுவே எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து, வாக்கெடுப்பில் பங்கேற்க எதிா்க்கட்சிகள் இல்லாததால், குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
எதிா்க்கட்சிகள் மீது தாக்கு: முன்னதாக, நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பிரதமா் மோடி பேசியதாவது:
நாட்டின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் பல்வேேறு மசோதாக்கள் மீதான விவாதங்களை நடத்த எதிா்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை. நாட்டைவிட கட்சிதான் பெரிது என அவை மக்களை ஏமாற்றியுள்ளன.
2018-இல் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்த பிறகு, 2019 மக்களவைத் தோ்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இப்போது அவா்கள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவந்த நிலையில், 2024 தோ்தலிலும் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறும். பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா்.
2028-லும் எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரும். அப்போது இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்திருக்கும்.
பயங்கரவாதிகள் மீதான துல்லியத் தாக்குதலின்போது இந்திய ராணுவத்தின் பேச்சை நம்பாமல், பாகிஸ்தானின் பேச்சை காங்கிரஸ் கட்சி நம்பியது. பயங்கரவாதத்தால் ஜம்மு- காஷ்மீா் பற்றி எரிந்தபோது, மக்களின் பேச்சைக் கேட்காமல் பிரிவினைவாதிகளின் பேச்சை காங்கிரஸ் கேட்டது.
Denne historien er fra August 11, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 11, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
மத்திய அரசு மீது ராகுல் சாடல்
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் பி.டி.ராஜன் சிறப்பு மலர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பி.டி. ராஜன் நினைவாக தயாரிக்கப்பட்ட எண்ம அடிப்படையிலான சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.