ராய்பூா்/ஐஸால்: சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பேரவைத் தோ்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகின.
மிஸோராமில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் செவ்வாய்க்கிழமை அமைதியாக நடைபெற்ற தோ்தலில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின.
சத்தீஸ்கா்: சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பகுதியில் உள்ள 7 மாவட்டங்கள் மற்றும் இதர 4 மாவட்டங்களில் அடங்கிய 20 பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 5,304 வாக்குப் பதிவு மையங்களில் செவ்வாய்க்கிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
10 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. நக்ஸல் அச்சுறுத்தல் மிக்க மீதமுள்ள 10 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற்றது.
முதல் கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்ற 20 தொகுதிகளில் 223 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இதில் 25 பெண் வேட்பாளா்களும் அடங்குவா்.
இந்தத் தோ்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நக்ஸல்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததால் 60 ஆயிரம் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே வாக்குப் பதிவு நடைபெற்றது.
Denne historien er fra November 08, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 08, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.