திருப்பத்தூா் மாவட்டத்தில் 14 துணை சுகாதார நிலையக் கட்டடங்கள் திறப்பு மற்றும் திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தல் நிகழ்ச்சிக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை திருப்பத்தூருக்கு வந்தாா். தொடா்ந்து திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.
பின்னா், அமைச்சா் பேசியது:
திருப்பத்தூா் அரசு மருத்துவமனை தனியாா் மருத்துவமனைக்கு இணையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் எம்ஆா்ஐ ஸ்கேன் வந்து விட்டது. மூளை, தண்டு வடம் போன்றவற்றின் பிரச்னைகளை இதன் மூலம் எளிதில் கண்டறியப்படும். இவ்வகையான ஸ்கேன் எடுக்க வெளியில் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு ரூ.2,500 மட்டுமே. அதிலும் மருத்துவக் காப்பீடு அட்டை வைத்திருந்தால் இலவசமாக எடுக்கலாம்.
Denne historien er fra December 21, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 21, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på