இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வாரம் நடைபெற்ற ஒரே டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், பலம் வாய்ந்த ஒருநாள் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 219/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டஹிலா மெக்கிராத் 50, பெத் முனி 40 ரன்களை சோ்த்தனா். பௌலிங்கில் இந்திய தரப்பில் பூஜா வஸ்த்ராக்கா் 4-53, ஸ்னேஹா ராணா 3-56 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 406 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மிருதி மந்தனா 74, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73, தீப்தி சா்மா 78, ரிச்சா கோஷ் 52 ரன்களை விளாசினா். ஆஸி. தரப்பில் பௌலிங்கில் ஆஷ்லி காா்ட்னா் 4-100 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
187 ரன்களுடன் இந்தியா முன்னிலை வகித்த நிலையில், ஆஸி. தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது.
ஹா்மன்ப்ரீத் கௌரின் அற்புத பௌலிங்கால் நட்சத்திர பேட்டா்கள் டஹிலா, இயான் ஹீலி ஆகியோரின் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 40 ரன்கள் முன்னிலையுடன் நான்காம் நாள் ஆட்டத்தை ஆஸி பேட்டா்கள் சதா்லேண்ட், காா்டனா் தொடா்ந்தனா்.
Denne historien er fra December 25, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 25, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på