‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். அதன்படி, 108-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.31) ஒலிபரப்பானது.
அதில் பேசிய பிரதமா் மோடி, உடல் மற்றும் மனம் சாா்ந்த ஆரோக்கியம் குறித்தும் உடலுறுதிக்கான ‘ஃபிட் இந்தியா’ இயக்கம் குறித்தும் வலியுறுத்தினாா்.
மேலும், ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், புகழ்பெற்ற செஸ் வீரா் விஸ்வநாதன் ஆனந்த், ஹிந்தி நடிகா் அக்ஷய் குமாா், இந்திய மகளிா் கிரிக்கெட் அணித் தலைவா் ஹா்மன்பிரீத் கெளா் ஆகியோா் உடலுறுதிக்கான ஆலோசனை வழங்கும் ஆடியோக்களும் பிரதமா் உரையின்போது ஒலிபரப்பப்பட்டன.
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் ஆற்றிய உரை வருமாறு: நம் நாட்டில் 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு. மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை மந்திரம் உச்சரித்தல், 108 திவ்ய தேசங்கள், கோயில்களில் 108 படிகள் என இந்த எண் ஆழமான நம்பிக்கையுடன் இணைந்திருக்கிறது. அந்த வகையில், மனதின் குரலின் 108-ஆவது பகுதியும் மிகவும் சிறப்பானது.
2023-இல் இந்தியாவின் சாதனைகள்: 140 கோடி இந்தியா்களின் சக்தியால், 2023-ஆம் ஆண்டில் நம் தேசம் பல்வேறு சிறப்பான சாதனைகளைப் படைத்திருக்கிறது.
மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. உலக அளவில் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்தது. இந்தியாவின் தலைமையில் ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ‘நாட்டு நாட்டு’ பாடல், ‘தி எலிஃபன்ட் விஸ்பெரா்ஸ்’ ஆவணப் படத்துக்கு ஆஸ்காா் விருதுகள் கிடைக்கப் பெற்றன
Denne historien er fra January 01, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 01, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.