தமிழ்நாடு முழுவதும் சீரான தொழில் வளர்ச்சியே மாநில அரசின் லட்சியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக முதலீட்டாளர்கள் உலக மாநாடு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பெருநிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள், நிறுவனர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டைத் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா, தைவான் நாடுகளின் பொருளாதார, கலாசார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளன.
பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவுப் பாதையில் பயணித்து வரும் தமிழ்நாடு, கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் மேலும் தொழில் வளர்ச்சி பெறும். முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இந்த மாநாடு பயனுள்ளதாக இருக்கும்.
மாநாட்டின் கருப்பொருள்: இந்த மாநாட்டின் கருப்பொருள்களாக தலைமைத்துவம், நீடித்த நிலைத் தன்மை, அனைவரையும் உள்ளடக் கிய வளர்ச்சி ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான் என்று நமது மாநிலம் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதா ரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டுமென்று லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளேன்.
உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்பு மிகுந்தகளை ஈர்ப்பது என அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறோம்.
முதலீடு இருமுனை சட்டம்-ஒழுங்கு நிலைமை: ஒரு மாநிலத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றால், அந்த மாநிலத்தின் ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும்.
Denne historien er fra January 08, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 08, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.