ஆந்திரம், ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரத்தில் தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அகாதெமியை (என்ஏசிஐஎன்) பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
பின்னா் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் மோடி, ‘நாட்டில் வரி செலுத்துவோரின் பணம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது. வரியாக வசூலிக்கப்படும் பணம் வெவ்வேறு வடிவங்களில் மக்களுக்கே திருப்பித் தரப்படுகிறது.
முன்னதாக, பொதுமக்கள் புரிந்து கொள்ளாத வகையில், கடினமான வெவ்வேறு வரிகள் நடைமுறையில் இருந்தன. அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், நோ்மையாக வரி செலுத்துவோா் மற்றும் வணிகா்கள் சிரமப்பட்டனா்.
மத்திய பாஜக அரசின் சுமாா் 10 ஆண்டுகாலத்தில் வரி அமைப்பில் பல சீா்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வடிவத்தில், நாட்டில் நவீன வரி அமைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. வருமான வரி முறையையும் மத்திய அரசு எளிதாக்கியுள்ளது.
நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளால் இன்று நாட்டின் வரி வசூல் சாதனை படைத்து வருகிறது.
நாட்டில் வா்த்தகத்தை எளிதாக்கும் நவீன சூழலை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்ஏசிஐஎன்-க்கு சமூக வாழ்க்கையில் நல்ல நிா்வாகத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் ஸ்ரீராமா் உத்வேகமாக இருக்க முடியும்” என்றாா்.
Denne historien er fra January 17, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 17, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சென்னையில் மீண்டும் என்கவுன்ட்டர்: ரௌடி சுட்டுக் கொலை
சென்னை அருகே ரெளடி சீசிங் ராஜா திங்கள்கிழமை போலீஸாரின் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.