‘வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் மிகப்பெரிய ஹிந்து கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன’ என்று தனது அறிவியல்பூா்வ ஆய்வறிக்கையில் இந்திய தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கள ஆய்வின்போது கிடைத்த கல்வெட்டுகளும் சிற்பங்களும் மசூதி அமைந்துள்ள இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன’ என்றும் தனது ஆய்வறிக்கையில் தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் நகல்கள், வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்ட நிலையில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, அந்தப் பகுதியில் அமைந்திருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னா்களால் கட்டப்பட்டதாக சா்ச்சை எழுந்தது. அதாவது, 17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், மசூதி வளாகத்தில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஹிந்துக்கள் சிலா் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் சீலிடப்பட்ட நீா்நிலையைத் தவிர, பிற பகுதிகளில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்னா் அலாகாபாத் உயா்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.
அதனடிப்படையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவியல்பூா்வ ஆய்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கினா். அதன் பிறகு ஆய்வை நிறைவு செய்ய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் 6 முறை கால நீட்டிப்பு வழங்கியது. மொத்தம் 2150.5 சதுர மீட்டா் அளவுக்கு வேலி அமைத்து அறிவியல்பூா்வமான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நிறைவு செய்த தொல்லியல் துறை, தனது 839 பக்க ஆய்வறிக்கையை சீலிட்ட உறையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி சமா்ப்பித்தது.
Denne historien er fra January 28, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra January 28, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.