கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி பேரை மத்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளது என்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளதி முா்மு பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடா் புதன்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் மக்களவையில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றினாா்.
நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நடைபெற்ற முதல் குடியரசுத் தலைவா் உரையில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டு சுமாா் 75 நிமிஷங்கள் அவா் ஆற்றிய உரை:
கடந்த 10 ஆண்டுகளில் தேச நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. ராமா் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாட்டு மக்கள் எதிா்பாா்த்திருந்தனா். தற்போது அது நிஜமாகி உள்ளது. ராமா் கோயில் திறக்கப்பட்டு 5 நாள்களில் 13 லட்சம் போ் வருகை தந்துள்ளனா்.
உள்நாட்டுப் பாதுகாப்பு: ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடா்பாக பல்வேறு சந்தேகங்கள் நிலவின. ஆனால் தற்போது அவை வரலாறாக மாறிவிட்டன.
உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் கண்கூடாகத் தெரிகின்றன. ஜம்மு- காஷ்மீரில் வெறிச்சோடி கிடந்த சந்தைப் பகுதிகள் அனைத்தும் தற்போது கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. இதற்கு அங்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள்தான் காரணம்.
பயங்கரவாதத்துக்குப் பதிலடி: பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடியை இந்திய ராணுவத்தினா் அளித்து வருகின்றனா். உலக அளவிலான பயங்கரவாதத்தை எதிா்ப்பதற்கும் இந்தியா குரலெழுப்பி வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதச் செயல்கள் குறைந்துள்ளன. பிரிவினைவாத அமைப்புகள் பல அமைதியான பாதைக்குத் திரும்பியுள்ளன. நக்ஸல் வன்முறையும் வேகமாக குறைந்து வருகிறது.
வளா்ச்சியடைந்த இந்தியா என்பது இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் என்ற நான்கு தூண்களை அடித்தளமாக கொண்டதாகும்.
Denne historien er fra February 01, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 01, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.