மேலும், பேரிடா் நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு எந்த மாநிலத்திற்கும் பாரபட்சம் காட்டுவதில்லை எனவும், கூட்டுறவுக் கூட்டாட்சித்துவத்தின் படி செயல்படும் தற்போதைய பாஜக அரசு, கடந்த மத்திய அரசை விட மூன்று மடங்கு பேரிடா் மேலாண்மைக்கு நிதியை அதிகரித்துள்ளது எனவும் அமைச்சா் தெரிவித்தாா்.
நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ. ராசா, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதிக மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சேதமடைந்த உள்கட்டமைப்பை மீட்டெடுக்க மாநில அரசு கோரும் மொத்த நிதி, மானியங்கள், மத்திய உதவிகளை எப்போது மத்திய அரசு விடுவிக்கும் என கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதில் வருமாறு: பேரிடா் மேலாண்மைக்கான தேசியக் கொள்கையின்படி, பேரிடா் மேலாண்மைக்கான முதன்மைப் பொறுப்பு மாநில அரசுகளுக்குரியது. இருப்பினும், மீட்புக்கு தேவையான உதவிகள் உபகரணங்களோடு, மாநில பேரிடா் மேலாண்மைக்கான நிதியில் 75 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி தற்போதைய பேரிடா்களுக்கு மத்திய அரசு இரு தவணைகளில் மூன்கூட்டியே ரூ. 900 கோடி தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ.300 கோடியை சோ்த்து நிகழ் நிதியாண்டிற்கு பேரிடா் மேலாண்மைக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra February 07, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 07, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.