தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியா வளர்ச்சியின் பாதையை நோக்கிச் செல்ல தற்போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் "ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வைக் காண முடிகிறது. இந்தத் திட்டங்கள் தூத்துக்குடியில் அமைந்திருந்தாலும், இந்தியா முழுவதும் வளர்ச்சியடைய இது உத்வேகம் அளிக்கும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கொள்ளளவை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்து, இத்துறைமுகத்தை பெரிய கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதி இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்துறைமுகத்தில் வெளித் துறைமுக சரக்குப் பெட்டக முனையத்துக்கு மட்டும் ரூ.7,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்க உதவும்.
முந்தைய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள், மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை.
காசிக்கு தமிழகத்தின் பரிசு: பசுமைக் கப்பல் முயற்சியின் கீழ், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் உள்நாட்டு நீர்வழிக் கப்பல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது, காசிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த பரிசு.
இத்துறைமுகம், நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் மையத் துறைமுகம். கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி, கப்பல்களுக்கு எரிபொருளை வழங்கும் வசதி ஆகியவற்றைக் கொண்டதாகும்.
Denne historien er fra February 29, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 29, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.