நமது சிறப்பு நிருபர்
பம்பரம் சின்னம் கேட்டு போராடுவது, கூட்டணி தலைமையுடன் முரண்பாடு எழாமல் உறவைக் காப்பது, நேரடி தேர்தல் கள அனுபவத்தை எதிர்கொள்வது, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை சமாளிப்பது என பன்முக அழுத்தங்களுக்கு மத்தியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ளார் மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இடையே தினமணிக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து...
மதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள விருதுநகர் தொகுதியில் நிற்காமல் திருச்சி மக்களவைத் தொகுதியைத் தேர்வு செய்தது ஏன்?
1998, 1999 என தொடர்ந்து இரு முறை சிவகாசி தொகுதியில் எனது தந்தை வைகோ வெற்றி பெற்றார். 2004-இல் மூன்றாவது முறையாகவும் மதிமுக வேட்பாளர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் வென்ற தொகுதி அது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பால் சிவகாசி தொகுதியே இல்லாமல் போனது. அதிலிருந்த பேரவைத் தொகுதிகளான ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி எம்.பி. தொகுதிக்கும், கோவில்பட்டி தூத்துக்குடி எம்.பி. தொகுதிக்கும் சென்றுவிட்டன. சிவகாசி, சாத்தூர், விருதுநகரை உள்ளடக்கி விருதுநகர் எம்.பி. தொகுதி ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஒரு தொகுதி என்ற குறுகிய வட்டத்துக்குள் மதிமுக-வை அடைத்துவிடக் கூடாது.
வாரிசு என்பதால் மதிமுகவில் வெகு விரைவில் உங்களுக்கு உயர் பதவி கிடைத்து விட்டதாக சொல்கிறார்களே?
அரசியலுக்கு வரும் விருப்பமோ, ஆசையோ, வேட்கையோ எனக்குத் துளியும் கிடையாது. 2019 மக்களவைத் தேர்தலில் தந்தையின் சுற்றுப்பயணத்தையும், இதர தேர்தல் களப் பணிகளையும் நான் திட்டமிட்டு தொண்டர்களுடன் பணியாற்றினேன். அதனால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள், என்னை கட்சிப் பதவியில் அமர்த்த குரல் கொடுத்தனர். பெரும்பான்மை ஜனநாயகத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதால் வேறுவழியின்றி அவர்களின் கோரிக்கையை தந்தை ஏற்றுக் கொண்டார். நிர்வாகக் குழுவில் உள்ள 106 பேரில் 104 பேர் என்னை ஆதரித்தனர். பின்னர், கட்சியின் தலைமை நிலையச் செயலர் பதவி, பின்னர் முதன்மைச் செயலர் பதவி, இப்போது, திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் ஆக நிற்கிறேன்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது மதிமுக-வின் விருப்பப் பட்டியலில் திருச்சி இருந்ததா?
Denne historien er fra March 27, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 27, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.