பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள காஸா மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதற்காக சென்று கொண்டிருந்த தொண்டு நிறுவன வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதன் 7 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
"வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன்' (டபிள்யுசிகே) அறக்கட்டளை என்ற அந்தத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அவர்களில் ஒருவரைத் தவிர அனைவரும் வெளிநாட்டினர்.
மிகப் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டபிள்யுசிகே அறக்கட்டளை சேகரித்த உணவுப் பொருள்களுடன் காஸாவை நோக்கி வந்துகொண்டிருந்த நிவாரணக் கப்பல்கள் திருப்பி அழைக்கப்பட்டன.
இது குறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் எங்களது அறக்கட்டளையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, போலந்து, பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களும், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவரும் அடங்குவர்.
மோதல் நடைபெறாமல் அமைதியாக இருந்த பகுதி வழியாக, டபிள்யுசிகே அறக்கட்டளையின் இலச்சினை பெரிதாகப் பொறிக்கப்பட்ட வாகனங்களில் சென்றுகொண்டிருந்தபோதும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
Denne historien er fra April 03, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra April 03, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.
மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வார இறுதி நாள்களில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மைக்கே ஆதரவு
‘க்வாட்' உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் 118 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை புதிய அதிபர் அநுரகுமார
இலங்கை அதிபா் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக (56) வெற்றி பெற்றாா். அந்நாட்டின் 9-ஆவது அதிபராக அவா் திங்கள்கிழமை (செப். 23) பதவியேற்க உள்ளாா்.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.