![பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி](https://cdn.magzter.com/1574665526/1715378939/articles/q-ZnQSaJf1715395075168/1715396229300.jpg)
97.31சதவீத வெற்றியுடன் அரியலூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளன. குறைந்த சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப். 8 வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகளை சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் சேதுராமவர்மா வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
தேர்ச்சி 0.16% உயர்வு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 94,264 பேர் எழுதினர். அதில் 4 லட்சத்து 47,061 பேர் மாணவிகள் 4 லட்சத்து 47,203 பேர் மாணவர்கள். இவர்களில், 4 லட்சத்து 22,591 மாணவிகளும் (94.53%); 3 லட்சத்து 96,152 மாணவர்களும் (88.58%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களைவிட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 18,743 பேர் (91.55%) தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த கல்வியாண்டுடன் ஒப் பிடுகையில் (91.39), நிகழாண்டு தேர்ச்சி 0.16 சதவீதம் அதிகம்.
Denne historien er fra May 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 11, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/QqDqBuhAZcwjo8DTtMTsys/1739833153538.jpg)
கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
எகிப்தின் கெய்ரோ பெருநகரப் பகுதியிலுள்ள மூன்று அடுக்கு குடியிருப்புக்கட்டடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்; மூன்று பேர் காயமடைந்தனர்.
8,000 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை
சென்னையில் 8,000 கண்புரை அறுவை சிகிச்சைகளை கட்டணமின்றி மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மார்ச் 19-இல் தமிழ்நாடு வட்ட ஓய்வூதிய குறைகேட்பு முகாம்
தமிழ்நாடு வட்ட அளவிலான ஓய்வூதிய குறைகேட்பு முகாம் மார்ச் 19-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம் காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/XNgWN1wKxguuWNIQEcisys/1739832120277.jpg)
காங்கோ: கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது புகாவு நகரம்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் முக்கியத்துவம் வாய்ந்த புகாவு நகரை ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றினர்.
![அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/iCttc54Rw1WmKWJ4HFWsys/1739831668156.jpg)
அனிசிமோவா, கசாட்கினா அதிர்ச்சித் தோல்வி
மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனை யான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
சீனா குறித்து சாம் பிட்ரோடா கருத்து; காங்கிரஸ் மீது பாஜக தாக்கு
சீனா குறித்து இந்திய அயலக காங்கிரஸ் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் கட்சியை பாஜக விமர்சித்துள்ளது.
![துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5 துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/mEKw3zifH3PxRtTFrwjsys/1739831734311.jpg)
துருவ், டேனிஷ் அசத்தல்; விதர்பா - 308/5
ரஞ்சி கோப்பை போட்டியில், மும்பைக்கு எதிரான 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.
![காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1997875/IyvL10Mgq98UVdjUkqGsys/1739831350899.jpg)
காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல்
இலங்கை கடற்படை, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் எம்.பி. மனைவிக்கு ஐஎஸ்ஐ தொடர்பு; சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு
காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோயின் மனைவி எலிசபெத் கோல்பர்னுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து அஸ்ஸாம் மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
WPL மந்தனா அதிரடி: பெங்களூரு வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 4-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.