மேலும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கனகு மகன் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கனகுவின் மற்றொரு மகன் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் செவ்வாய்க்கிழமை பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில், அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர்.
தொடர்ந்து, புதன்கிழமை காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் முருகன் (47), ராஜேந்திரன் மகன் சுரேஷ் (40), இவரது மனைவி வடிவுக்கரசி (32), சின்னு மகன் கந்தன் (47), பழனி மகன் ஜெகதீசன் (60), கணேசன் மகன் பிரவீன் (27), தருமன் மகன் சுரேஷ் (45), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ் (39), கண்ணன் மகன் சேகர் (65) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் ஆறுமுகம் (65), கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து மனைவி தனக்கொடி (60), வீரசோழபுரத்தைச் சேர்ந்த மணி மகன் செல்வம் (30), சிறுவங்கூர் பகுதியைச் சேர்ந்த கருத்தன் மகன் கோபால் (60), மாடூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கண்ணன் (36) ஆகிய 5 பேர் இறந்தனர்.
Denne historien er fra June 20, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 20, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு
கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில், சொகுசுக் காா் தயாரிப்புக் குழுமமான பிஎம்டபிள்யு இந்தியாவில் 10 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்
தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி (அக். 7) ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.
இரானி கோப்பை: மும்பை சாம்பியன்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி 15-ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை.
வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா
ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.
திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்
மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி. கடிதம்
தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து: போராட்டத்தில் 21 காவலர்கள் காயம்; 1,200 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஆன்மிகப் பேச்சாளா் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினா் மீது கற்கள் வீசப்பட்டதில் 21 காவலா்கள் காயமடைந்தனா். போராட்டக்காரா்கள் 1,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்
மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் சென்னை எழும்பூா், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.