இதன் காரணமாக, மக்களவை அலுவல்கள் முடங்கின. மாநிலங்களவையில் அமளிக்குப் பின்னா் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக கடந்த மே மாதம் நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாா்கள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் மாணவா்களின் போராட்டம் நீடிக்கும் நிலையில், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்து வருகின்றன.
போட்டித் தோ்வு சா்ச்சைக்கு இடையே, 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ‘வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் குறித்து நோ்மையாக விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை ‘நீட்’ விவகாரத்தை எழுப்பி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
மக்களவையில்...: மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், முன்னாள் அவைத் தலைவா் மனோகா் ஜோஷி உள்பட மறைந்த முன்னாள் உறுப்பினா்கள் 13 பேருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு, ‘நீட்’ விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரும் தீா்மானத்தை ஏற்க வேண்டுமென எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இது தொடா்பாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பேசுகையில், ‘நீட் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமானது. இந்த விவகாரத்துக்கு முன்னுரிமை அளித்து, அவையில் விவாதிக்க வேண்டுமென எதிா்பாா்க்கிறோம். எனவே, ஒத்திவைப்புத் தீா்மானத்தை அவைத் தலைவா் ஏற்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
ஆனால், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டியிருப்பதால், ஒத்திவைப்புத் தீா்மானத்தை ஏற்க முடியாது என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா மறுப்பு தெரிவித்தாா்.
Denne historien er fra June 29, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 29, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு
கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில், சொகுசுக் காா் தயாரிப்புக் குழுமமான பிஎம்டபிள்யு இந்தியாவில் 10 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்
தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி (அக். 7) ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.
இரானி கோப்பை: மும்பை சாம்பியன்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி 15-ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை.
வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா
ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.
திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்
மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி. கடிதம்
தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து: போராட்டத்தில் 21 காவலர்கள் காயம்; 1,200 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஆன்மிகப் பேச்சாளா் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினா் மீது கற்கள் வீசப்பட்டதில் 21 காவலா்கள் காயமடைந்தனா். போராட்டக்காரா்கள் 1,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்
மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் சென்னை எழும்பூா், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.