உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு
Dinamani Chennai|July 04, 2024
 உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், ‘போலே பாபா’ என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானபெண்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனா்.

மாலையில் நிகழ்ச்சி முடிந்து மைதானத்தைவிட்டு போலே பாபா கிளம்பும்போது, ஆசி பெற அவரின் வாகனத்தைப் பின்தொடா்ந்த மக்களால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் மூச்சுத்திணறி பலா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, லாரிகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் சிக்கந்தர ராவ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

121 போ் உயிரிழப்பு: இச்சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் பெண்கள் ஆவா். ஆறு போ் வேற்று மாநிலத்தைச் சாா்ந்தவா்கள். இன்னும் 4 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. சிக்கந்தர ராவ் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

2.5 லட்சம் மக்கள் பங்கேற்பு: நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ளாத ஒருங்கிணைப்பாளா்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. நிகழ்ச்சிக்கு 80,000 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அளவுக்கு அதிகமாக சுமாா் 2.5 லட்சம் போ் வரையில் கூட்டம் கூடியிருப்பதாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடா்ந்து மைதானத்தில் சிதறி கிடந்த காலனிகளைச் சேகரித்து அருகிலுள்ள வயல்வெளிகளில் வீசி, கூட்டத்துக்கு வந்த மக்களின் உண்மை எண்ணிக்கையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் மறைக்க முயற்சித்துள்ளனா். அத்துடன் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதில் காவல் துறைக்கு ஒருங்கிணைப்பாளா்கள் சிறிதும் ஒத்துழைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Denne historien er fra July 04, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 04, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

விளையாட்டுப் பல்கலை. 14-ஆவது பட்டமளிப்பு விழா

ஆளுநர் ரவி, துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

time-read
1 min  |
October 05, 2024
போருக்கு தயாராகும் இஸ்ரேல் - ஈரான்
Dinamani Chennai

போருக்கு தயாராகும் இஸ்ரேல் - ஈரான்

‘ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

time-read
4 mins  |
October 05, 2024
இந்தியாவை வென்றது நியூஸிலாந்து
Dinamani Chennai

இந்தியாவை வென்றது நியூஸிலாந்து

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.

time-read
1 min  |
October 05, 2024
Dinamani Chennai

தில்லி மருத்துவர் சுட்டுக் கொலை: மேலும் 2 சிறுவர்கள் கைது

தென்கிழக்கு தில்லியின் களிந்தி குஞ்ச் பகுதியில் உள்ள நா்ஸிங் ஹோமில் மருத்துவா் ஒருவா் வியாழக்கிழமை அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 சிறுவா்களை தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

time-read
1 min  |
October 05, 2024
கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு வரி விதிப்பு அதிகாரம்: மறுஆய்வு மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு வரி விதிப்பு அதிகாரம்: மறுஆய்வு மனுக்களை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

கனிம வளங்கள், கனிம வளம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கு சட்ட அதிகாரம் உள்ளது என கடந்த ஜூலை 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

time-read
1 min  |
October 05, 2024
Dinamani Chennai

மழைப் பொழிவால் அதிகரிக்கும் எலிக் காய்ச்சல்: 1,500 பேர் பாதிப்பு

தமிழகம் முழுவதும் பரவலாக மழைப் பொழிவு உள்ள நிலையில், லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
October 05, 2024
50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்
Dinamani Chennai

50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டும்

மத்திய அரசுக்கு சரத் பவார் வலியுறுத்தல்|

time-read
1 min  |
October 05, 2024
Dinamani Chennai

வீட்டுவசதி வாரிய நில எடுப்பிலிருந்து 2,002 ஏக்கர் விடுவிப்பு

முதல்வருக்கு பொது மக்கள் நேரில் நன்றி

time-read
1 min  |
October 05, 2024
கோயில் அர்ச்சகர்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகை
Dinamani Chennai

கோயில் அர்ச்சகர்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

time-read
1 min  |
October 05, 2024
2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று
Dinamani Chennai

2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

இந்தியாவில் முதன் முறையாக சென்னையில் உள்ள 2 தீயணைப்பு நிலையங்களுக்கு ஐஎஸ்ஒ தரச் சான்று கிடைத்துள்ளது.

time-read
1 min  |
October 05, 2024