சட்ட மசோதாவுக்கு கர்நாடக மாநில தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சட்ட மசோதா நிறைவேற்றம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை கட்டாயமாக்கும் வகையில் "கர்நாடக மாநில உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா 2024' க்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு விகிதம்: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் மேலாண்மை வேலைகளில் 50 சதவீதம், மேலாண்மை அல்லாத வேலைகளில் 75 சதவீதம், "சி', "டி' பிரிவு வேலைகளில் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வழங்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.
இந்த சட்டத்தின்படி பத்தாம் வகுப்பு தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படிக்காதவர்கள், கன்னடத் தேர்வைத் தனியாக எழுதித் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சட்ட மசோதாவின் விதிகளை அமல்படுத்துவதற்கென உதவி தொழிலாளர் ஆணையர் அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். சட்ட விதிகளை கடைப்பிடிக்காவிட்டால் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை கர்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூலை 18) தாக்கல் செய்ய முதல்வர் சித்தராமையா திட்டமிட்டிருந்தார்.
Denne historien er fra July 18, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 18, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ.90.52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ
ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக 'தி ராய்ட் டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு
யுபிஐ, ரூபே அட்டையை சா்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை
ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.
அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்
‘அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை ஊக்குவித்ததிலும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தியதிலும் ஜன் தன் திட்டம் முதன்மையானது’ என்று பிரதமா் மோடி புதன்கிழமை புகழாரம் சூட்டினாா்.