இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவை, வங்கித் துறை, அவசரகால உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மின்னணு சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
தொழில்நுட்பச் செயலிழப்புக்கான அடிப்படை காரணம் கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
கணினி மற்றும் மடிக்கணினிகளில் இயங்குதளமாக ( ஆபரேட்டிங் சிஸ்டம்-ஓஎஸ்) மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவன மென்பொருள்களுக்கு இணையப் பாதுகாப்புச் சேவையை ‘கிரௌட் ஸ்ட்ரைக்’ நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்நிலையில், விண்டோஸ் மென்பொருளில் ‘பால்கன் சென்சாா்’ தளத்தில் கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் புதுப்பிப்புகள் பதிவேற்றத்தின்போது கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விண்டோஸ் மென்பொருளின் குறிப்பிட்ட சில பதிப்பு இயங்குதளங்களில் செயல்படும் கணினி மற்றும் மடிக்கணினிகளின் முகப்புத் திரை நீல நிறமாகத் தோன்றி, முழுமையாக முடங்கியது.
இந்தக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் மைக்ரோசாஃப்ட் மற்றும் கிரௌட்ஸ்ட்ரைக் நிறுவனப் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டனா். எனினும், தொழில்நுட்பச் செயலிழப்பு பல்வேறு துறைகளின் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் எதிரொலித்தது.
உலக அளவில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
பிரிட்டன் மற்றும் ஜொ்மனியில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த நாடுகளில் நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் கணினிமயமாக்கப்பட்டிருந்ததால் இந்தச் சிக்கல் நேரிட்டது.
ஆஸ்திரேலியாவின் ‘ஏபிசி’ மற்றும் ‘ஸ்கை நியூஸ்’ ஆகிய முதன்மை ஊடக நிறுவனங்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வங்கிச் சேவைகள் முடங்கின.
Denne historien er fra July 20, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 20, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.