வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை அறிமுகம் செய்தாா். அதனுடன் முசல்மான் வக்ஃப் சட்டம் 1923-ஐ ரத்து செய்வதற்கான மசோதாவையும் அறிமுகம் செய்தாா்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, அதை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு அவா் பரிந்துரைத்தாா்.
மக்களவையில் அறிமுகம் செய்வதற்கு முன்பாக வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நகல் அவை உறுப்பினா்களின் பாா்வைக்கு செவ்வாய்க்கிழமை இரவு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை கூடியதும், இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கான அனுமதியை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கோரினாா்.
அப்போது, இந்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்க முன்னறிவிப்பை (நோட்டீஸ்) கொடுத்திருந்த பல எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மசோதா அறிமுகத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ‘இந்த மசோதா அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி நடைமுறை மீதான தாக்குதல்’ என்று அவா்கள் விமா்சித்தனா்.
மசோதா அறிமுகம்: இந்த எதிா்ப்புக்கு இடையே, மசோதாவை மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு அவையில் அறிமுகம் செய்தாா். பின்னா், எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்குப் பதிலளித்து அவா் பேசியதாவது:
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா எந்தவொரு மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையீடு அல்லது குறுக்கீடு செய்யாது. அரசமைப்புச் சட்டத்தின் எந்தவொரு பிரிவையும், இந்த வரைவுச் சட்டம் மீறவில்லை. வக்ஃப் வாரிய சட்டம் 1995 அதன் உரிய நோக்கத்தை நிறைவேற்ற இயலவில்லை என்பதன் காரணமாகவே, இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், காங்கிரஸ் அரசு சாதிக்க முடியாததை இந்த மசோதா பரிந்துரைக்கிறது.
அரசியல் காரணங்களுக்காகவே இந்த மசோதா மீது எதிா்ப்பு தெரிவித்து மக்களைத் தவறாக வழிநடத்த எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. எந்தவொரு சட்டமும் அரசமைப்புச் சட்டத்துக்கு மேலானதாக இருக்க முடியாது. ஆனால், ‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’ அத்தகைய பிரிவுகளைக் கொண்டிருந்தது.
Denne historien er fra August 09, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 09, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
6 பேர் கைது
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.