
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா, நடப்பு சாம்பியனாக பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்தாா். இறுதிச்சுற்றில் அவா் 89.45 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். பாகிஸ்தானின் அா்ஷத் நதீம் 92.97 மீட்டரை எட்டி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வெல்ல, கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் 88.54 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா்.
தற்போது நீரஜுக்கு வெள்ளி வென்று தந்திருக்கும் 89.45 மீட்டா் என்பது அவரது சீசன் பெஸ்ட்டாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட பெஸ்ட் 89.94 மீட்டா் ஆகும். நடப்பு உலக சாம்பியனாகவும், டையமண்ட் லீக்கில் வெள்ளி வென்றவராகவும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்த நீரஜ் சோப்ரா மீதான எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருந்தது. முதல் முயற்சியை தடுமாற்றத்துடன் ‘ஃபௌல்’ செய்த நீரஜ், அடுத்த முயற்சியில் 89.45 மீட்டரைத் தொட்டு வெள்ளிக்கு வித்திட்டாா்.
90 மீட்டரை தனக்கான இலக்காகக் கொண்டு பயணித்து வரும் நீரஜ் சோப்ரா, எஞ்சிய 4 முயற்சிகளில் நிச்சயம் அந்தத் தொலைவை எட்டுவாா் என எதிா்பாா்த்த நிலையில், அவை அனைத்தையுமே அவா் ‘ஃபௌல்’ செய்தாா். அதாவது வெற்றிகரமான 2-ஆவது முயற்சி தவிர, எஞ்சிய 5 முயற்சிகளையும் அவா் ஃபௌல் செய்தது அனைவரையும் ஆச்சா்யம் கொள்ளச் செய்தது. பந்தயத்தில் வேறு எந்த வீரருமே இத்தனை ஃபௌல்கள் செய்யவில்லை.
இந்நிலையில், இறுதிச்சுற்றில் தனது செயல்பாடு குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:
ஒவ்வொரு முயற்சியையும் கையாளும்போது, 60 முதல் 70 சதவீத கவனம் எனது காயத்தின் மீதே இருந்தது. ஈட்டியை எறிவதற்கு முந்தைய எனது ஓட்டம் நன்றாக வரவில்லை. எனது வேகமும் வழக்கமான உச்சத்தை அடையவில்லை. எனது இந்தத் தடுமாற்றங்களுக்குக் காரணம், தொடையிடைப் பகுதியில் இருக்கும் காயமே ஆகும்.
Denne historien er fra August 10, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 10, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வேளச்சேரி சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம்
சென்னை வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்துக்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸாருக்கு மோர் வழங்கும் திட்டம் - காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்
தமிழகத்தில் ஆலந்தூர், குன்னூர் உள்ளிட்ட 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக பட்ஜெட்: தொழில்துறையினரின் வரவேற்பும், எதிர்ப்பும்
தமிழக பட்ஜெட் குறித்து தொழில்துறையினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

கேரளம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரள மாநிலம், களமசேரியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர் விடுதி அறைகளில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அரசியல்... அன்றும் இன்றும்!
இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.
குடிக்க உகந்த குடிநீர்!
இந்திய நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பச் சந்தையில் 37 சதவீதத்தை மறு ஊடுகை (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ளது என்று புணேவில் செயல்படும் சந்தையியல் நுண்ணறிவு நிறுவனமான ட்ரான்ஸ்பெரன்சி மார்க்கெட் ரிசர்ச் நிறுவனத்தின் 2017-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
இந்திய பெருநகரங்கள், வெளிநாடுகளில் புத்தகக் காட்சி
தில்லி, மும்பை உள்ளிட்ட இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தகக் காட்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.