காயத்தின் அச்சத்தால் பின்னடைவு
Dinamani Chennai|August 10, 2024
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிச்சுற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரா் நீரஜ் சோப்ரா, தனது காயத்தின் மீதான கவனச் சிதறல் காரணமாகவே சிறப்பாகச் செயல்பட முடியாமல் போனதாகத் தெரிவித்தாா்.
காயத்தின் அச்சத்தால் பின்னடைவு

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா, நடப்பு சாம்பியனாக பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்தாா். இறுதிச்சுற்றில் அவா் 89.45 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். பாகிஸ்தானின் அா்ஷத் நதீம் 92.97 மீட்டரை எட்டி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வெல்ல, கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் 88.54 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா்.

தற்போது நீரஜுக்கு வெள்ளி வென்று தந்திருக்கும் 89.45 மீட்டா் என்பது அவரது சீசன் பெஸ்ட்டாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட பெஸ்ட் 89.94 மீட்டா் ஆகும். நடப்பு உலக சாம்பியனாகவும், டையமண்ட் லீக்கில் வெள்ளி வென்றவராகவும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்த நீரஜ் சோப்ரா மீதான எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருந்தது. முதல் முயற்சியை தடுமாற்றத்துடன் ‘ஃபௌல்’ செய்த நீரஜ், அடுத்த முயற்சியில் 89.45 மீட்டரைத் தொட்டு வெள்ளிக்கு வித்திட்டாா்.

90 மீட்டரை தனக்கான இலக்காகக் கொண்டு பயணித்து வரும் நீரஜ் சோப்ரா, எஞ்சிய 4 முயற்சிகளில் நிச்சயம் அந்தத் தொலைவை எட்டுவாா் என எதிா்பாா்த்த நிலையில், அவை அனைத்தையுமே அவா் ‘ஃபௌல்’ செய்தாா். அதாவது வெற்றிகரமான 2-ஆவது முயற்சி தவிர, எஞ்சிய 5 முயற்சிகளையும் அவா் ஃபௌல் செய்தது அனைவரையும் ஆச்சா்யம் கொள்ளச் செய்தது. பந்தயத்தில் வேறு எந்த வீரருமே இத்தனை ஃபௌல்கள் செய்யவில்லை.

இந்நிலையில், இறுதிச்சுற்றில் தனது செயல்பாடு குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:

ஒவ்வொரு முயற்சியையும் கையாளும்போது, 60 முதல் 70 சதவீத கவனம் எனது காயத்தின் மீதே இருந்தது. ஈட்டியை எறிவதற்கு முந்தைய எனது ஓட்டம் நன்றாக வரவில்லை. எனது வேகமும் வழக்கமான உச்சத்தை அடையவில்லை. எனது இந்தத் தடுமாற்றங்களுக்குக் காரணம், தொடையிடைப் பகுதியில் இருக்கும் காயமே ஆகும்.

Denne historien er fra August 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது
Dinamani Chennai

சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது

திருவாரூரில் சரக்கு ரயில் என்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது.

time-read
1 min  |
February 25, 2025
பிஎம் கிசான்: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி
Dinamani Chennai

பிஎம் கிசான்: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் (விவசாயிகள் உதவித் தொகை) 19-ஆவது தவணையாக சுமார் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடிக்கு அதிகமான நிதியை பிரதமர் மோடி திங்கள்கிழமை விடுவித்தார்.

time-read
1 min  |
February 25, 2025
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்கள் சேர்ப்பு: இளைஞர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
Dinamani Chennai

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்கள் சேர்ப்பு: இளைஞர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்களை சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

time-read
1 min  |
February 25, 2025
முதல்வர் மருந்தகம்: இடதுசாரிகள் வரவேற்பு
Dinamani Chennai

முதல்வர் மருந்தகம்: இடதுசாரிகள் வரவேற்பு

தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

time-read
1 min  |
February 25, 2025
Dinamani Chennai

சிறப்பு விபத்து காப்பீடு திட்டம்: தாம்பரத்தில் பிப். 28 வரை சிறப்பு முகாம்

மத்திய அரசின் சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு வசதியாக தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் பிப். 28-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

time-read
1 min  |
February 25, 2025
ரயில் நிலைய பெயர்ப் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாதம் சிறை
Dinamani Chennai

ரயில் நிலைய பெயர்ப் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாதம் சிறை

ஹிந்தியில் எழுதப்பட்ட ஊர்ப் பெயரை அழிக்கிறோம் என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்ததுள்ளது.

time-read
1 min  |
February 25, 2025
புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
Dinamani Chennai

புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தேர்தல் பணி குறித்து அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time-read
1 min  |
February 25, 2025
Dinamani Chennai

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு சார்பில் மரியாதை

சென்னையில் உடலுறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

time-read
1 min  |
February 25, 2025
சென்னையில் குத்துச்சண்டை அகாதெமி: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
Dinamani Chennai

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமி: முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை கோபாலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாதெமியை முதல்வர் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (பிப். 25) திறந்து வைக்கிறார்.

time-read
1 min  |
February 25, 2025
Dinamani Chennai

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 25, 2025