வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தந்த பாடம்
Dinamani Chennai|August 14, 2024
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6.
வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தந்த பாடம்

அதே ஒலிம்பிக்கில் தனிநபராக அதிக பதக்கம் வென்ற சீன நீச்சல் வீராங்கனை ஜாங் யுஃபெய்யின் பதக்கங்களும் 1 வெள்ளி, 5 வெண்கலம் என அதே 6.

சுமாா் 140 கோடி பேரைக் கொண்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையும், ஏறத்தாழ அதே மக்கள் தொகை கொண்ட சீனாவை சோ்ந்த ஒரே வீராங்கனையின் பதக்க எண்ணிக்கையும் சமம்.

இரட்டை இலக்க பதக்க எண்ணிக்கைதான் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் இலக்கு. அதற்காக, இந்தியா்கள் களம் கண்ட அத்தனை விளையாட்டுகளிலும், அவா்களின் தயாா்நிலைக்காக மத்திய அரசு ரூ.470 கோடி வரை செலவிட்டுள்ளதாக புள்ளிவிவரம். என்றாலும், 84 நாடுகள் பதக்கம் வென்ற பட்டியலில் இந்தியாவுக்கு 71-ஆவது இடம்.

ஒலிம்பிக் என்றாலே, நம் அணியின் ஒட்டுமொத்த பதக்கத்தையும், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தனிநபா் பதக்கத்தையும் ஒப்பிட்டு பெருமூச்செறிவதே வழக்கம். ஆனால், இதுவல்ல ஒப்பீடு. நமது முந்தைய செயல்பாடுகளுக்கும், தற்போதைய செயல்பாட்டுக்கும் இடையே உள்ளதை ஆராய்வதே சரியான ஒப்பீடு.

பதக்க எண்ணிக்கையில் இந்தியாவின் உச்சமாக இருக்கும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்குடன் ஒப்பிட்டால் இது குறைவு தான். 3 ஆண்டு உழைப்பு, மிகுந்த எதிா்பாா்ப்பு, அரசு அளித்த கோடிகளிலான நிதியுதவி, வெளிநாட்டுப் பயிற்சி என்ற கணக்கில் பாா்த்தாலும் இந்த 6 பதக்கங்கள் சற்றே சுணங்க வைக்கும்தான்.

இருந்தாலும், மக்கள் தொகையோடு ஒப்பிட்டு ஒரேடியாக விமா்சித்தோ, போட்டியாளா்களின் முயற்சியை கேள்வி கேட்டோ இந்த 6 பதக்கங்களை அலட்சியப்படுத்த வேண்டியதில்லை. பாரீஸ் ஒலிம்பிக் மூலம், பதக்கமும் பெற்றிருக்கிறோம். பாடமும் கற்றிருக்கிறோம்.

ஒரு ஒலிம்பிக்கில், ஒரே விளையாட்டில் முதல் முறையாக 3 பதக்கங்கள், ஒரு போட்டியாளருக்கு ஒரு ஒலிம்பிக்கிலேயே இரு பதக்கங்கள் போன்ற வரலாறு துப்பாக்கி சுடுதலில் படைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் தடகளத்தில் அடுத்தடுத்து பதக்கம் என்ற பெருமை ஈட்டி எறிதலில் கிடைத்துள்ளது. 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கி சுடுதல், மல்யுத்தத்தில் அறிமுக வீரா்கள் பதக்கம் வென்றுள்ளாா்கள். இது தவிர, தடகளம், டேபிள் டென்னிஸ், வில்வித்தை போன்றவற்றில் இதுவரை எட்டாத சுற்றுகளுக்கு முதல் முறையாக முன்னேறி தடம் பதித்திருக்கிறாா்கள்.

Denne historien er fra August 14, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 14, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்
Dinamani Chennai

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை: மோகன் பாகவத்

இந்தியாவை ஆங்கிலேயர்கள் உருவாக்கவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்தியா இருந்து வருகிறது' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

time-read
1 min  |
February 17, 2025
சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு
Dinamani Chennai

சென்னையில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கட்டடக் கழிவுகளை அகற்றுவதற்கான வரைவு வழிகாட்டுதலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

விதைத்தால் மட்டும் போதுமா?

பனைவிதை விதைப்பது பற்றிய பேச்சு இப்போது பரவலாகி வருகிறது. ஒரு கோடி பனைவிதை நடுவதற்கான பணியை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

time-read
2 mins  |
February 17, 2025
பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்
Dinamani Chennai

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்

கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

time-read
2 mins  |
February 17, 2025
பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!
Dinamani Chennai

பிரதமரின் அமெரிக்க பயணம் - ஒரு பார்வை!

ரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே அண்மையில் நடைபெற்ற வாஷிங்டன் சந்திப்பு இரு தரப்பாலும் திருப்திகரமானது என சொல்லிக் கொள்ளப்பட்டாலும், அதில் இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல அம்சங்களை அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பை எழுப்புகிறது.

time-read
2 mins  |
February 17, 2025
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Dinamani Chennai

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மானாமதுரை, பிப். 16: கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.

time-read
1 min  |
February 17, 2025
இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு
Dinamani Chennai

இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சி - எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு

மஸ்கட், பிப். 16: 'இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி' என்று குறிப்பிட்ட மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அப்பிராந்தியத்தின் வளர்ச்சி, இணைப்பு, கடல்சார் பாதுகாப்புக்கு நாடுகள் ஒருங்கிணைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
February 17, 2025
ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Dinamani Chennai

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். (வலது) மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு.

time-read
1 min  |
February 17, 2025
திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை
Dinamani Chennai

திருவானைக்கா கோயில் அம்மனுக்கு புனரமைத்த தாடங்கம் பிரதிஷ்டை

திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு புனரமைக்கப்பட்ட தாடங்கம் (காதணி) பிரதிஷ்டை செய்யப்பட்டது.

time-read
1 min  |
February 17, 2025
Dinamani Chennai

மும்பை தாக்குதலுக்கு முன் தென்னிந்தியாவுக்கும் பயணித்த தஹாவூர் ராணா

கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பாக வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பயங்கரவாதி தஹாவூர் ராணா பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
February 17, 2025