வளரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-சிங்கப்பூர் உறுதி
Dinamani Chennai|August 27, 2024
வளா்ந்து வரும் துறைகளான எண்மமயமாக்கம், திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி, சுகாதார வசதிகள் மற்றும் மருந்துகள், அதிநவீன உற்பத்திமுறை, இணைப்பு வசதிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியாவும் சிங்கப்பூரும் உறுதிபூண்டுள்ளன.
வளரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-சிங்கப்பூர் உறுதி

இந்தியா-சிங்கப்பூர் இடையே அமைச்சர்கள் அளவிலான 2-ஆவது வட்டமேஜை (ஐஎஸ்எம்ஆர்) கூட்டம், சிங்கப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், இந்திய தரப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வாணிகம்-தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கொண்ட குழு பங்கேற்றது. சிங்கப்பூர் தரப்பில் அந்நாட்டின் துணை பிரதமரும் வாணிகம்-தொழில் துறை அமைச்சருமான கன் கிம் யாங் தலைமையில் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் கே.சண்முகம், எண்ம மேம்பாடு, தகவல் மற்றும் உள்துறை இணையமைச்சர் ஜோஸ்பின் டியோ உள்ளிட்டோர் கொண்ட குழு கலந்துகொண்டது.

இக்கூட்டத்தில், எதிர்கால முக்கியத்துவம் கொண்ட வளரும் துறைகளில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஐஎஸ்எம்ஆர் அமைப்புமுறையின் கீழ் அடையாளம் காணப்பட்ட 6 முக்கிய ‘தூண்களான’ எண்மமயமாக்கம், திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி, சுகாதார வசதிகள் மற்றும் மருந்துகள், அதிநவீன உற்பத்திமுறை, இணைப்பு வசதிகள் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Denne historien er fra August 27, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 27, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
Dinamani Chennai

லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்

லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
September 18, 2024
இந்தியா சாம்பியன்
Dinamani Chennai

இந்தியா சாம்பியன்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.

time-read
1 min  |
September 18, 2024
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
Dinamani Chennai

விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்

விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.

time-read
2 mins  |
September 18, 2024
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
Dinamani Chennai

பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

time-read
1 min  |
September 18, 2024
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
Dinamani Chennai

சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time-read
2 mins  |
September 18, 2024
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
Dinamani Chennai

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா

நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 18, 2024
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
Dinamani Chennai

சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக

சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 18, 2024
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
Dinamani Chennai

ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை

திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.

time-read
1 min  |
September 18, 2024
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
Dinamani Chennai

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு

நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
September 18, 2024
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
Dinamani Chennai

விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி

விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

time-read
1 min  |
September 18, 2024