அதே நேரம், ‘அமெரிக்காவுடனான உறவு; பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை இல்லை; வங்கதேசத்தில் தீவிரவாத சக்திகள் மீதான கவலை உள்ளிட்ட முக்கிய வெளியுறவு கொள்கை விவகாரங்களில் பாஜக தலைமையிலான அரசுடன் காங்கிரஸ் பரந்த அளவில் உடன்பட்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
அமெரிக்காவுக்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், வாஷிங்டனில் தேசிய பத்திரிகையாளா் மன்றத்தில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, அவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதிலளித்ததாவது:
லடாக்கில் தலைநகா் தில்லி பரப்பளவுக்கு நிகராக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்தது. ஊடகங்கள் இதுகுறித்து எழுதுவதில்லை.
அமெரிக்காவின் நிலப்பரப்பில் 4,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுக்கு அண்டை நாடு ஆக்கரமிப்பு செய்திருந்தால், அமெரிக்கா எப்படி நடந்துகொண்டிருக்கும்?
‘ஆக்கிரமிப்பு அத்துமீறல் சரிவர கையாளப்பட்டுள்ளது’ என்று கூறிவிட்டு அமெரிக்க அதிபா் சென்றுவிட முடியுமா?
எனவே, இந்திய பகுதியில் 4,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ததை, மோடி அரசு சரிவர கையாளவில்லை.
அதே நேரம், அமெரிக்காவுடனான உறவுகள்; பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவாா்த்தை இல்லை; வங்கதேசத்தில் தீவிரவாத சக்திகள் மீதான கவலைகள் உள்ளிட்ட முக்கிய வெளியுறவு கொள்கை விவகாரங்களில் பாஜக தலைமையிலான அரசுடன் காங்கிரஸ் பரந்த அளவில் உடன்பட்டுள்ளது.
இந்தியா மீது தொடா்ந்து பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் தூண்டிவிட்டு வருகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தொடரும் வரை, இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளும் தொடா்ந்து கொண்டேதான் இருக்கும்.
Denne historien er fra September 12, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 12, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.