இதைத்தொடா்ந்து, 155 நாள்களுக்குப் பின்னா், தில்லி திகாா் சிறையில் இருந்து கேஜரிவால் நிரந்தர ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
தில்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான விற்பனை தொடா்பான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ-யும், அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன.
இந்த முறைகேடு தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடா்ந்து, தில்லி திகாா் சிறையில் இருந்த கேஜரிவாலை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ கைது செய்தது.
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியபோதிலும், சிபிஐ வழக்கில் அவா் தொடா்ந்து திகாா் சிறையில் இருந்தாா்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் சிறை திரும்பினார்.
இதைத்தொடா்ந்து சிபிஐ வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரியும், தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் இரு மனுக்களை தாக்கல் செய்தாா். இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், செப்.5-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்படி செல்லுபடியாகுமா?: இந்நிலையில், சிபிஐ வழக்கில் கேஜரிவாலுக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. இரு நீதிபதிகளும் தனித்தனியாக தீா்ப்பளித்தனா். அதில், கேஜரிவாலை சிபிஐ கைது செய்தது சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதில் இருவரும் மாறுபட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளனா்.
சிபிஐயின் அவசரத்தை புரிந்துகொள்ள முடியவில்லை: கேஜரிவாலை சிபிஐ கைது செய்த நேரம் குறித்து நீதிபதி உஜ்ஜல் புயான் தனது தீா்ப்பில் கேள்வி எழுப்பியுள்ளாா்.
அவா் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
Denne historien er fra September 14, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 14, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.